பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 செளந்தர கோகிலம்

அதைக்கேட்ட வீரம்மாள் அவ்வளவாவது அவர் தனது வேண்டுகோளுக்கிணங்கினாரே என்று நினைத்துப் பேருவகை கொண்டவளாய், “சுவாமிகளின் சித்தம். அதற்குமேல் நான் கட்டாயப்படுத்த எனக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆனால் தெய்வச் செயலாய் அம்மாளும் குழந்தையும் அகப்பட்டால், முதலில் எங்களுக்குத் தாங்கள் உடனே ஒரு தந்தியனுப்பிவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டும். நாங்கள் உடனே வந்து குதித்து விடுகிறோம். அம்மாளையும் குழந்தையையும் காணுகிற வரையில் எங்களுடைய துயரமும் ஏக்கமும் நீங்கவே போகிறதில்லை. நாங்கள் நல்ல தூக்கமாகத் துரங்கவும் மாட்டோம். தங்கள் உத்தரவுப்படி இந்த விஷயங்களை யெல்லாம் ரகஸியமாகவே வைத்துக் கொள்ளுகிறோம்” என்று கூறி முடித்தாள்.