பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடி குண்டுகள் - 181

உயிரோடு வைத்துக் கொளுத்திவிட்டு எல்லாச் சொத்துக்களையும் சுருட்டிக்கொண்டு ஊரைவிட்டுப் புதுச்சேரிக்கல்லவா ஒடிப்போய் அங்கே ஒளிந்துகொண்டிருந்தார்கள். போய் ஆறு மாதத்திற்குள் இவர்களுடைய குடும்பமே நசித்து நாசமாய்ப் போய்விட்டது. இவள் மெத்தைப் படியிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்தாளாம். பொறி கலங்கிப் போய்விட்டது. மூன்று நாள் வரையில் உணர்ச்சியில்லாமல் கிடந்தாளாம். அவர்கள் வைத்தியம் செய்ததில் தெளிவு ஏற்பட்டதாம். ஆனால் அதுமுதல் இவளுடைய கண் பார்வை அடியோடு கெட்டுப் போய்விட்டதாம். இவளுடைய புருஷன் என்ன செய்தானாம், திடீரென்று புதிய பணக்காரன் ஆனானல்லவா! புதுச்சேரிக்குப் போய்க் குடியில் இறங்கியதன்றி யாரோ தேவடியாளையும் வைத்துக் கொண்டா னாம். அவள் பெருத்த ரோகியாம். அவளுடன் சேர்க்கை ஏற்பட்டு ஆறு மாசத்திற்குள், அவனுடைய உடம்பு முழுதும் காயும் பழமுமாய் முண்டு முண்டாய்க் கிளம்பியதோடு கைகால் களின் விரல்களெல்லாம் குறையத் தொடங்கி விட்டனவாம். உடம்பு முழுதும் பொத்துப் போய், சீழை வெளிப்படுத்த ஆரம்பித்தது. வைத்தியர்கள் அது தீராத குஷ்டரோகமென்று சொல்லிவிட்டார்களாம். அப்பனைவிட டம்பாச்சாரி தனத்தில் பன்மடங்கு அதிகமாயிருந்த அவனுடைய பிள்ளை அந்தத் தொற்று வியாதி தங்களுக்கும் பரவுமென்று பயந்து அவனை சர்க்கார் குஷ்டரோக ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டு விட்டானாம். இப்போதும் அவன் அங்கேதான் புழுத்து நாறிக் கிடக்கிறானென்று கேள்வி. பிள்ளை என்ன செய்தான் தெரியுமா! புதுச்சேரியிலுள்ள ஒரு பெரிய தனவந்தருடைய பெண்ணை எப்படியோ மயக்கி அவளைக் கெடுத்துவிட்டான். அந்தப் பெண் ரதிபோலவே இருப்பாளாம். அவன் ஐந்தாறு மாசத்தில் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டானாம். அதற்குமேல், அங்கே இருக்க முடியாமல் போய்விட்டதாம். அண்ணாமலையென்பதல்லவா அவனுடைய பெயர். அந்த அண்ணாமலையும், அவனது தங்கையான கமலவல்லியும், தனிகருடைய பெண்ணைத் திருட்டுத்தனமாக அழைத்துக் கொண்டு யாரிடத்திலும் சொல்லாமல் எவருக்கும் தெரியாதபடி இரவோடிரவாய் வேறே எந்த ஊருக்கோ ஒடிப்போய் விட்டார் களாம். இரண்டு கண்களும் அவிந்துபோன நிலைமையிலிருந்த