இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 231
மகா துர்லபமாகிவிட்டது. ஜனங்கள் அவரைப் பலவகையில் அவமானப்படுத்தி, வைது, காலால் உதைத்து, எச்சிலை முகத்தில் உமிழ்ந்து சகிக்கவொண்ணாத துன்பமும் அவமானமும் உண்டாக்கிவிட்டனர். அது அசிஸ்டெண்ட் கலெக்டருடைய கிரகமாதலாலும், போலீசார் சொற்பமாகவே இருந்தமையாலும், அவர்கள் ஜனங்களை அடக்க இயலாமல் போய்விட்டது. அத்தகைய மகா சிறப்பான மரியாதைகளுடன் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தார் காராக்கிரகப் பிரவேசம் செய்தார். புஷ்பாவதியோ போலீஸார் தன்னிடம் வருவதற்கு முன்பே, அவ்விடத்தைவிட்டு மெதுவாக நழுவிச்சென்று போலீஸ் கமிஷனர் குறித்த சாமியார்களண்டை போய்ச் சேர்ந்தாள். அன்றைய கலியாணமும் கிரகப் பிரவேசமும் அவ்வாறு சமாப்தியடைந்தன.