பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹊2 * லா. ச. ராமாமிருதம் - நம்ம ஊரே நல்ல ஊர்.” "நான் பாட்டுக்கு நிம்மதியா ஊருக்கு முதலாளி வெச்சிருக்கும் மளிகைக் கடையிலே வேலை செஞ்சுக்கிட்டு வேளாவேளைக்கு அவர் வீட்டிலேயே சாப்பிட்டு வேட்டி யுடுத்திக்கிட்டு கைச்செலவுக்கு நெதம் கால் ரூவா கல்லாப் பெட்டியிலேருந்து எடுத்துக்கிட்டு ராசா மாதிரியிருந்தேன்.” - எனக்கு மாத்திரம் என்னா கொறவு? வீட்டு வேலையை செஞ்சிக்கிட்டு அவுங்க கொளந்தையெ கொஞ்சி கிட்டு குசாலாய்த்தானேயிருந்தேன்! அப்பன் ஆயி இல்லேன்னு ஒரு நாளாவது நெனச்சிருப்பேனா அந்த ஊட்டு அம்மாதான் எனக்கு எல்லாமா இருந்தாங்களே-!' . - இருந்து என்னா பிரயோசனம்? உன்னை எங்கேயாவது கட்டிக் கொடுத்து ஒழிச்சிருக்கணும்!" - ஐயோ பண்ணையிலே ஒரு ஆளுக்குத்தான் என்னை முடிச்சுப் போட்டு வெச்சிருந்தாங்களே- அதுக்குள்ளார நீதானே என் மேலே கண்ணெப் போட்டே' - நீ மாத்திரம் சும்மாயிருந்தியா? அடிக்கடி கடைக்கு வந்து கடிச்சுக்க ஒரு துண்டு கட்டைப் புகையிலே கொடுன்னு என் கையை இடிச்சு வாங்கிப் போனையே. மறந்து போச்சா? - ஒருத்தரையொருத்தர் ஏன் குத்தம் சொல்லனும்? ஏமாந்து போனோம். அவ்வளவுதான். - 'எல்லாந்தான் போச்சு, அண்ணக்கி என்னவோ சீக்கிரமாக் கடையைக் கட்டிக்கிட்டு அண்ணக்கின்னு ரயில் டேஷனுக்குப் போற வழியிலே நான் ஏன் வரணும்? நீ கடலைக் காய் கொல்லையிலே காவல் காத்துட்டு, நான் வந்தவளியே நீ ஏன் வரணும்? - களத்துமேட்டிலே வக்கிறத்துக்கு முத்திரையைக் கொடுத்திட்டு வந்தேன்.'