பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்று : 8; “பின்னாலிருந்து ‘களுக்கென்று சிரிப்பு ஒலித்தது. திரும்பிப் பார்த்தேன். அந்த வீட்டுக்காரரின் பெண் நின்று கொண்டிருந்தாள். இரட்டைப்பின்னல், உள்பாவாடை தெரியச் சல்லாப் புடைவை, தனி மேலாக்கு, ஸ்னோ, பவுடர், நாகரிகத்தின் மற்றச் சின்னங்களுடன். “மனிதன் அழிவதற்குக்கூட அவ்வளவு பயப்படவில்லை. அவமானப்படத்தான் அஞ்சுகிறான். அதுவும் பெண்ணெதிரில், அவமானத்திலும் அடி மயக்கத்திலும் கண்கள் இருண்டன. என் கண் எதிரில், என் ஊரில், வயற்புறத்தில், மரத்தடியில் புற்று எழுந்தது- என்னுள் ஏதோ சீறி எழுந்தது. “என்னடா முழிச்சுப் பாக்கறே. சுட்டெரிச்சுடறாப்போல! நல்ல பாம்புப் பார்வை! நீ பாம்பாயிருந்தால், உனக்கு ராஜா மூங்கில் தடி இருக்குன்னு தெரியுமா?” 'வஞ்சம் தீர்த்துக்கொள்ளவேண்டுமென்று அப்பொழுதே தோன்றிவிட்டது. சமையல் வேலை முடிந்துவிட்டது. சாப்பாட் டிற்குக் கொஞ்ச நேரமிருந்தது. காற்று வாங்கவும், குளிக்கவும், உடை மாற்றவும் பரிசாரகர்கள் வெளியே போனார்கள். ஆனால் நான் மாத்திரம் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவமானம் தாங்காமல் மனம் புழுங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கேலிச் சிரிப்பு இன்னமும் காதில் ஒலித்தது. “என்ன பண்ணறே, இருட்டிலே உட்கார்ந்துண்டு? உடுத்திக்கப் போகல்லே?" “என் முதலாளிதான் கருவேப்பிலைக் கொத்தை அண்டா ரசத்தில் உருவி உதிர்த்துக்கொண்டு, ஏதோ சொன்னான். அவன் குரலில் இப்பொழுது கோபமில்லை. “எந்தத் தொழிலிலும் ஒண்ணு தெரிஞ்சிக்கணும் தெரியா விட்டால் அதைக் கத்துக்கற வழியைப் பார்க்கணுமே தவிர, ஏமாத்தற வித்தை கூடாது. இன்னொண்ணு என்னன்னா,