பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



19

சமுதாயத்தை மலரச் செய்ய வேண்டும் என்கின்ற புதிய சமுதாயப் புரட்சிக்கு, எத்தகைய எதிர்ப்புக்கும் மார்பைக் காட்டி நிமிர்ந்து நின்று போராடும் நாங்கள், ஜாதி ஒழிப்பில் மட்டும் பின்னடித்து வீடுவோமென்று பேசுவது பொருந்தாது என்பதை உங்களால் உணர முடியும். (கரகோவும்)

இனி ஜாதி ஒழிப்புக்காகப் போராடுவதாகப் பெருமையடித்துக்

கொள்ளும் எந்தக் கட்சியை விடவும், எந்த ஸ்தாபனத்தைவிடவும், ஜாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட் கட்சி இளைத்து நிற்கிறதா என்று நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். (கரகோஷம்) அதற்காக சில உண்மைகளைக் கூறுகிறேன். ஜாதி வெறியோ, மத வெறியோ, இன்னபிற உயர்வு தாழ்வுக்கான, பேதா பேதத்திற்கான எந்த வெறிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆகாயத்துக்கும் பாதாளத்துக்கும் உள்ள தூரம் என்பதை எங்களை அறிந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

எங்கள் திருமணம்
நாங்கள் மறந்தும் ஜாதி பாராட்டுவது கிடையாது. தமிழ்

நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களை பிரமுகர்களை எடுத்துக் கொள்ளுங்கள்! திருமணம் புரிந்து கொள்ளுவதில் நாங்கள் ஜாதீய முறைக்கு இடம் கொடுக்கவில்லை.

என்னை எடுத்துக் கொள்ளுங்கள்! நான் எந்த ஜாதியோ?

என் வாழ்க்கைத் துணைவியார் என்ன ஜாதியோ? நாகர் கோவில் பக்கத்தான் நான், சென்னைக்காரி அந்த அம்மையார். நான் தமிழன் அந்த அம்மாள் தெலுங்கச்சி, (ஒரே சிரிப்பு). நாங்களிருவரும் குடும்பம் நடத்துகிறோம். எங்கள் குழந்தைகள் தமிழகத்தின் மனிதர்கள்.

எங்கள் கட்சியின் தலைவர் ராமமூர்த்தி ஒரு ஜாதியில் பிறந்தவர். ராமமூர்த்தியின் வீட்டரசியார் (மீண்டும் சிரிப்பு) வேறொரு

ஜாதியில் பிறந்தவர், ஜாதி ஒழிப்பின் சிறந்த சின்னமாக இரண்டு செல்விகள் அவர்களுக்கு உண்டு

எங்கள் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவர் சீனிவாசராவ்.

அவரும் கலப்பு மணம் புரிந்து ஜாதி ஒழிப்பில் தனது பங்கை உறுதியாகக் காட்டியிருக்கிறார்.

இதோ! தோழர் சங்கரய்யாவும் கலப்பு மணம் செய்தவர்

தான். கட்சியின் செயற்குழு அங்கத்தினர் 5 பேரில் 4 பேர் கலப்பு மணம் செய்தவர்கள்.

தோழர் மோகன் குமாரமங்கலம், டாக்டர் சுப்பராயன் அவர்களின்

பிள்ளை. வங்கத்துக் கல்யாணியை (சிரிப்பு) வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு, ஜாதி ஒழிப்பில் முன் நிற்கிறார். இது