பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
27



அல்ல, அநாகரீகச் செயல்கள் என்கின்றோம். நிதானமான நடவடிக்கைகள் அல்ல, வெறிச்செயல்கள் என்கின்றோம்.

எனவே, இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இது மட்டுமல்ல, சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு

திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால்... என்று வைத்துக் கொள்ளுவோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு).

இதிலிருந்து வெட்டுப்பழி குத்துப்பழிக்கு வழி பிறக்கும்.

அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு இந்த அநாகாகப் போக்கு அனுமதிக்கப்படத்தக்கது தானா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்ளுகிறது.

குறிப்பிட்ட ஒரு ஜாதியைத் தனிமைப்படுத்தி, அநாகரீகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட

முடியாது. ஆதரவு கிடைக்காது இன்றைய எதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால், பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிரிகள் என்றோ , மற்ற ஜாதிகளில் பிறந்தவர்களெல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்லுவதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள், இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை .

ஆகவே, ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும்

இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரம்கெட்ட செயலாகும்.

மேலும், இந்த மாதிரி வெறிச்செயல்களுக்கு பற்பல ஜாதியிலும்

பிறந்துவிட்ட நல்லெண்ணம் படைத்தவர்கள், ஜாதி ஒழிய வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும், ஜாதி ஒழிப்பின் பெயரால் மேற்படி வெறிச் செயல்கள் நடந்தால் ஆதரவளிப்பார்களா? மாட்டார்கள். ஆகவே, ஜாதி ஒழிப்புச் சாக்கோடு நடைபெறும் இந்த வெறிச் செயல்களுக்குப் பெருவாரியான மக்க