பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
35



செய்வதாகும். (சிரிப்பு) இந்தச் செயல், ஜாதியை எதிர்ப்பவர்களில் பெரும்பாலாருடைய எதிர்ப்பைத்தான் திரட்டுமேயொழிய, உண்மையில் ஜாதியை ஒழிக்க கொஞ்சமும் உதவிகரமாக இராது.

எனவே, ஜாதி ஒழிப்பு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி,

சென்ற காலத்தில் ஈ. வெ. ரா, வோடு ஒத்துழைத்தபோதிலும், இன்றும் முறையாக, ஜனநாயக ரீதியாக, ஒரு வகுப்புத் துவேஷமுமின்றி, சகல பகுதி மக்களையும் திரட்டி, ஜாதிமுறையை ஒழிக்க துணிகிற நடவடிக்கைகளில், கம்யூனிஸ்டுக் கட்சி முன்னணியில் நிற்கத் தயாராக இருந்தபோதிலும் ஈ.வெ.ரா. தலைமையில் இன்று தி. க. வினர் நடத்திவரும் மேலே நான் விளக்கிக் காட்டிய போராட்ட நடவடிக்கைகள் பலவற்றையும் கம்பூனிஸ்ட் கட்சி அழுத்தமாகக் கண்டிக்கிறது.

உண்மையாகவே ஜாதீயக் கொடுமைகளும் ஜாதீய மறையும்

ஒழிய வேண்டுமென்று விரும்புகிற சகல கட்சிகளும், சகல பகுதி மக்களும் தங்கள் உணர்விலும், நடைமுறையிலும், ஜாதியை ஒழிக்க முன்வர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

அதேபொழுதில், ஜாதி ஒழிப்பு பெயரால், பெரியார் தூண்டும்

நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த, கூட்டாகத் தடுத்து நிறுத்த குரல் எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறது.

பிராமணர் கடமை
இனி இந்தப் பிரச்னையில் ராஜ்ய, மத்திய சர்க்கார்களின் நிலை,

கடமை ஆகியவற்றைப் பற்றியும், பெரியார் போராட்டத் தாக்குதலுக்கு இரையாகி நிற்கும் குறிப்பிட்ட பகுதியினரின் கடமைப் பற்றியும் சிற்சில கூற விரும்புகிறேன்.

"அன்பார்ந்த தோழர்களே ! தமிழ்ப் பொது மக்களே!

அரசியல் சட்டப் புத்தகத்தையும், காந்தியடிகள் படத்தையும் தேசீயக் கொடியையும் எரித்து, ஜாதி ஒழிப்பின் பெயரால் ஈ. வெ. ரா. நடத்தும் போராட்டம் நாட்டுக்கு ஒரு பெரிய பாதகத்தையும் விளைவிக்கிறது. அதாவது வளர்ந்துவரும் ஒன்றுபட்ட ஜனநாயக இயக்கத்தைச் சீர்குலைக்க உதவுகிறது. எப்படி?

"தமிழகப் பெரு மக்களுக்கு எதிராக, பலவித நடவடிக்கைகளை

காமராஜ் சர்க்கார் எடுத்துவருகிறது. இந்த சர்க்காரின் தலைவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்ற ஒரே காரணத்துக்காக, ஈ.வெ.ரா. அவரை ஆதரித்து வருகிறார். ஈ.வெ.ரா. பெரியார் கைது ஆன பிறகு அவர் வெளியிட்ட செய்தியில்கூட, காமராஜ் சர்க்காரின் கையைப் பலஹீனப்படுத்துகிற எந்தக் காரியத்தையும் மறந்