பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஜாதி ரோஜா

தான் அவள் சிந்தை வேலை செய்தது. தொடர்ந்து கற்பனை செய்து பார்க்கத் திராணி பெற்ற சமயம், அவளுடைய மனக்கண்களின் விரிப்பிலே அழகேசனின் கம்பீரமான அழகுருவம் தெரிந்தது. கன் னச் சிவப்பு கண்களுக்கு இடம் மாறியது. உதட்டுச் சிரிப்பு உள் ளத்தை அழவைத்தது.

டெலிபோன் மணி ட்ரிங், ட்ரிங்க்’ என்று மூச்சுப் பிடிக்கச் சத்தம்போட்டது-வானத்து நிலவைத்தன் கையில் பிடித்துக்கொடுத் தால்தான், பிசைந்திருக்கும் சாதத்தை உண்ண முடியுமென்று. அடம் பிடிக்கின்ற விதரண புரியாத பாப்பா மாதிரி.

அழகிக்கு நடந்துபோகும் அளவுக்குப் பொறுமை இல்லை ; ஓடினுள்: உடுத்துயிருந்க கிரேப் ஸில்க் கால்களிலே பின்னிக் கொண்டது. சரிப்படுத்தினுள். ‘ஹல்லோ, யார் டாக்டர் லார் தானே பேசறது ?. என்ன...இல்லிங்களா ?...பின்னே யார் ? யார், கஜேந்திரன் ஸாரா ? ஆமாம், அழகியேதான் பேசுகிறேன். ஆமா, அழகியேதான் அழகேசன், ஒ, அவரையா கேட்கிறீர்கள்? மர்டியில் இருக்கிருரென்று நினைக்கிறேன். சரி அடுத்தவாரம் உங் களைச் சந்திக்கிறேன். இப்போது மனம் சரியாகயில்லே. மேலும், போனில் பேசுவதென்பதும் சரியில்லை. நன்றி...என். பேரில் நல் லெண்ணம் வைத்திருப்பதற்கு ரொம்ப ரொம். நன்றி, லார் . ஆமாம், உங்களை சுசீலா அக்கா வீட்டிலேதான் நான் சந்திக்க முடி யும். வருகிற ஞாயிற்றுக்கிழமை காலேயில் பத்து மணி சுமாருக்குச் சந்திக்கிறேன்...நன்றி !’

ரிஸிவரை ரெஸ்டில் வைப்பதற்கும் மாடிப்படியிலிருந்து பூட்ஸ் ஒலி புறப்பட்டுத் தொடர்வதற்கும் கணக்காக இருந்தது.

அழகி எதிர்பார்த்தது நூற்றுக்கு நூறு சரி. அழகேசன்தான் அது ; ஆம் ; அது அவளுடைய நெஞ்சில் தீப்பந்தம் காட்டிற்ை. போலச் சுட்டது. முதல்நாள் சம்பவத்தைக் கிளறிஞள். அவ ருடைய அப்பாவின் நிலை கவலைக்கிடமாக யிருக்கிறதென்று டாக்டர் சுந்தரவதனம் சொன்னதைக் கேட்டு, அவர் ஏன் அப்படி அரச மரத்துப் பிள்ளையார் மாதிரி கப் சிப் என்றிருந்தார் ? --சிவராத் திரியாகக் கழித்த அந்த விடியாத நீண்ட இரவைப் பற்றிய ஞாபகம் ஓடியது.அழகேசன் பவனத்திலே எரிமலை வெடித்த அதிசயத்தைபூகம்பம் வாய் பிளந்த நிகழ்ச்சியை அங்கம் அங்கமாக, காட்சி காட்சியாக எண்ணலாளுள். சூழ்ச்சி என்ற நாலெழுத்து வார்த் தைதான் அவளது மனச்சாட்சியின் தளத்தில் நின்று அறக்கப்பறக்கக் குரல் தந்தது. . * -- - +

பெற்றி தந்தைக்கே பிள்ளை துரோகமா? ஒரு சமயம், அவர். அவரேதான் மருந்தில் மாற்று மருந்தை அல்லது, டாக்டர் சொன்னது