பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஜாதி ரோஜா

  • சடக் கென்று நின்றான் அவன்- ஸ்கிப்பிங் விளையாடும் பாப்பாவின் பாதத்தில் கயிறு அகப்பட்டுக் கொண்டால், அப்படியே குழந்தை தடுமாறி மலைத்து நின்றுவிடுமே, அதுமாதிரி. .

பாதங்கள் கண்களுக்குச் சேதி சொல்லின. பார்வையிலே ஒரு மின்னல். மூளை விழித்துக் கொண்டது. முந்திரிக் கொட்டைக் கும் இந்தத் கண்களுக்கும் ஏக ஒற்றுமை.

‘ ஆ, டம்பப்பை ஒண்னு !... புஸ்தகம் ரெண்டு...! உதிர்ந்த ரோஜாப் பூக்கள். என்று கரிகாலன் தனக்கு மட்டும் கேட்கும் அளவுக்குக் குரலைச் சரிப்படுத்தியவாறு சொல்லிக் கொண்டான். அவனுக்கு மண்டையில் கனம் ஏறியது; கைகளில் பாரம் ஏறியது ; வழி மிதித்து வழி நடந்தான். -

பட்டணத்தின் கண்களிலே தூக்கம் ஊஞ்சலாடியது ; போதை அம்மானே கொட்டியது. -

காலக் கடிகாரத்தில் மட்டும் மெயின் ஸ்பிரிங் , பாலன்ஸ் ஸ்டாப் இவற்றுக்கெல்லாம் பழுதே ஏற்படாதோ ?... அவன் ‘ புத்திசாலியாய்த் தான் இருக்க வேண்டும் !

டங்க்.டங்க் - இரண்டல்ல- மணி பத்து. தெருவிளக்கு. சிந்தித்துக் கொண்டிருந்தது. - -

கரிகாலனின் நெஞ்சில் டக், டக் என்று ஒரு சத்தம் புறப் பட்டது. பரிசோதனைக்குழாயில் சோதனைக்கு ஆளாக்கப்படும் திரவப் பொருள் சூடுபட்டுக் கொதிக்கும் அல்லவா, அம்மாதிரி ஒரு நிலை அவனுள் எழுந்தது. கைகள் மாத்திரமல்ல, உடம்பு பூராவுமே பயம் காட்டியது. அந்த டம்பப்பை, புத்தகங்கள், பேணுபையைப் பிரித்தான். அழகுச் சாதனங்கள் இருந்தன. பெண் ஒருத்தியின் பெயர் காணப்பட்டது. திருமணப் பரிசாக இருக்க வேண்டும். முதலில் இருந்த புத்தகத்தைப் புரட்டினன். அவ னுக்கு திக் என்றது. முகப்புப் பக்கத்தில் முகமன் கூறி ஓடின. வரிகளுக்குப் பேசத்தானு தெரியாது ? - . . . .

வி மணமகன் திரு அழகேசன் - மணமகள் திருமதி வாழ்க்கை என்பது முள் ரோஜா என்கிறார்கள். இருந்து விட்டுப் போகட்டுமே ? முள் இல்லைபென்றால், ரோஜா ஏது ? முள் ரோஜா வில்-ரோஜா முள் வரில் முள் ‘ என்னும் அந்த ஒரு சொல்லை மட்டும் நீக்கும் சக்தி, வாழ்க்கையை அமைத்துக் காட்டுபவர்களின் கையில் அல்லவா இருக்கிறது? முள் நீங்கினுல், அப்புறம் ரோஜாதான் வாழ்க்கை , வாழ்க்கையே ரோஜாதான்! . -- - : அன்புடன்

கரிகாலன்.”