பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஜாதி ரோஜா

தெளியுமா என்று சோதிச்சுப்பார்க்கத்தான் கஜேந்திரனைக் கொண்டு ஒரு திட்டம் போட்டேன். முரளியைத் தன்னக்கட்டி அவரைக் கொண்டே அழகேசனுக்குத் தபால் எழுதவும் செய்தேன். திரை மறைவிலே நாட்கமாடிய கஜேந்திரன் அழகேசனிடம் ரகசியம் பூரா வையும் சொல்லிவிட்டாரோ, என்னவோ ?...அழகேசனுக்கு ஒரு பாவத்தையும் செய்யாமலிருக்கும் போதே என்னை விஷம் கொடுத் துக் கொல்லச் சதி பண்ணிய துரோகி அவன் ; ஆனால் இப்போது என் ரகசியத் திட்டம் அம்பலமானல், நாளைக்கே-அல்ல, இன்று ராத், திரிக்குள்ளேயே என்னைத் தீர்த்துக் கட்டி விடுவான். என் மகன் என்று அவனைச் சொல்லிக் கொள்வதற்குக்கூட வெட்கப்பட வேண் டியவன் நான், அப்பன் அருமை அப்பன் மாண்டால்தான் தெரி யும் !...கஜேந்திரன் என்னேக் காட்டிக் கொடுப்பதைப் பற்றிக் கவலை யில்லை. -

அழகேசனிடமிருந்து அழகியைக் காப்பாற்ற நான் வேலியாக அமைந்தபோது மாத்திரம் என் உயிர் எனக்கு வெல்லக் கட்டியாக யிருந்திச்சு. ஆணுல் இப்போது என் எண்ணமெல்லாம் புழுதி மண் ளுகி விட்டது. சுசீலா, நான் இன்ைெரு பெரிய தப்பு செய்திட்டேன். இது உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கத்தான்வேனும், முரளி பைத்தியக்காரத்தனமாக அழகியைப் பற்றிச் சொன்னதை வைத் துக் கொண்டு, அழகிக்கு கடுதாசி எழுதி புத்தகத்திலே வச்சில் டேன். இங்கே கீழே குழாயடிக்குப் போனபோது கசங்கிப்போன கடுதாசி கையிலே தட்டுப் பட்டது. ஆழகி எனக்கு எழுதின பதில் போலத்தான் தோனுச்சு. முரளியும் நேற்று வந்து தன் குற்றத்தை எடுத்துச் சொல்லி மன்னுக்கும்படி வேண்டினர். அவர் மூலம் தான் எனக்கு அழகியின் இருப்பிடம் தெரிஞ்சுது. அழகியை உயி ரோடு காணுகிற வரைக்கும் என் உயிர் என் வசமில்லை ; ஏதாவது எக்குத்தப்பாக நடந்திடக்கூடாதே யென்றுதான் முன்னலேயே போலீசுக்கு வேறே போன் மூலம் தகவல் அனுப்பிச்சேன். அது தான் அவங்களும் எனக்கு முந்திக்கொண்டு வந்திருக்கிருங்க. சரி, விஷயத்துக்கு வருவோம். எனக்கு என்னவோ இனம் புரியாத ஒரு பயம் மனசுக்குள்ளேயே சுத்திக்கிட்டிருக்குது. என்ன கெட்ட க்ரி iம் நடக்கப் போகுதோ, என்னவோ?...இந்தக் கெட்டது என்னை ஒட்டி-அதிலும் என் பிள்ளையைக் கொண்டுதான் முக்கால் வாகி, நடக்க வேணும். உயிர் போனதற்குப் பின்னல்ே பெற்ற பிள்ளை கையர்லே நெய்ப் பந்தமும் பிடி ஆரிசியும் வாங்கிக்கிறதுக்கு முன்பு, நான் என் உயிரையே அவனுக்கு எழுதிக் கொடுத்திட முடிஷ் செய்திட்டேன். ஆக, அவன் என்னை மட்டும் எதுவும் செய்யட்டும் , எனக்குப் பயமில்லை. பாவம், அவனுக்கு என் சொத்தைக் கொடுக் காத நான் என்னுடைய உயிரையாவது கொடுக்க வேண்டாமா?