பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஜாதி ரோஜா

அழகியின் கதை விசித்திரமாகத்தான் இருக்கிறது. தன் புருஷன் பேரில் கேஸ் கொடுக்க எண்ணி, அத்தானத் தன் கட்சிக்கு வழக் காட நியமிப்பதற்கு வரவிருந்தவர்கள், பாவம் இன்று மூச்சுப் பேச் சற்றுப் படுக்கையில் இருக்கிறார்கள். -

“ நர்ஸ் ஹாஸ்டலில் எங்களுடன் நல்லபடியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் ; என் நண்பர் கஜேந்திரன் அன்புரிமையோடு வேண்டிக் கொண்டபடியேதான் நான் அழகியிடம் இந்தப் போட்டோ ஆல்பத்தைக் காட்டினேன். உடனேயே, ஐயோ, நான் பால வனத்துச் சுடர் விளக்காகி விட்டேனே! என்று ஒலமிட்டு மயங்கிக்

ழே விழுந்து விட்டார்கள்,” என்று விளக்கினன் கரிகாலன். -

போட்டோ ஆல்பம் சுசீலாவைக் கூப்பிட்டது. அண்டினுள் ; பார்த்தாள். * . . . . -

“ ஆ1. என்ன வினுேதம் இது ?. அழகேசன இது ?...” “ஆமாம், அக்கா அழகேசன் பட்டம் பெற்றவராம் ; ஆன லும் பயங்கர மிருகம் ; இந்தப் பேய்க்குக்கூட ஒரு நாள் அழகி இரக்கம் காட்டி, விபத்தில் சிக்கிய அழகேசனைக் காப்பாற்றி யிருக் கிறார்களென்றால், அவர்களது நல்ல மனத்தைக் கைகூப்பிக் கும் பிடத்தான் வேண்டும்!” - . -

சுசீலாவுக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை. ஆனல் மேஜைமீது விரிந்திருந்த மேற்படி படங்கள் நம்பு, தாயே, நம்பு ! என்று வேண்டிக்கொண்டன. கண்களையும் இப்போது நம்பினுள் ; நம்பவேண்டியவள் ஆனுள். நம்பிக்கை, மனித மனத்திற்குப் போதையாக மட்டும் அன்மயாமலிருந்தால், சரி..! ... அந்தப் போட்டோ ஆல்பம் - - - புகைப்படம் எண் ஒன்று ; அழகேசன், அழகியை ஆத்திரத் துடன் நெருங்கி அவளது கழுத்தைப் பிடித்து நெறித்தபடி நின்றான்! புகைப்படம் எண் இரண்டு ; அழகி அருகே கின்றாள். அவ ளது பக்கத்தில் அஞ்சி ஒடுங்கி நின்ற அவளுடைய அப்பாவின் உயிருக்கு நேரே உயிர் பறிக்கும் துப்பர்க்கியை நீட்டிப் பயமுறுத்திக் கொண்டிருந்தான் அழகேசன்

புகைப்படம் எண் மூன்று. மணவறையிலே அழகியின் கழுத்

தில் தாலி பூட்டிக் கொண்டிருக்கிருன் அழகேசன்

புகைப்படம் எண் நான்கு; அழகேசன் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா போல, பத்துப் பதினைந்து பெண்கள் சூழ ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டிருக்கிருன்

புகைப்படம் எண் ஐந்து : மைலாப்பூரிலிருக்கும் அழகேசன் ஜூல்க் ஏற்போரியத்தின் உள்ளே பீரோவிலிருந்த் துணிம்ணிகள், இரும்புப் பெட்டியிலுள்ள பணம் முதலியனவற்றை திருடர் கூட்டத்