பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடிகளில்‌ ஓடுது நும்‌ ரத்தக்‌ குழாய்களிலே பீடுயர்‌ சக்திப்‌ பெருகி வழியு (து) உங்கள்‌,

ஒவ்வோர்‌ துளிரத்தத்தும்‌ ஒப்பற்ற நல்லுறுதி, செவ்வையாய்‌ யுங்கள்‌ சீரியல்‌ உணர்ச்சியும்‌

சக்தியும்‌ உறுதியும்‌ மக்களின்‌ வாழ்வில்‌ உத்தம பட்சம்‌ ஓங்கி நிற்கின்றன - நீவிர்‌ விட்ட கல்வேலையை வீரங்கொள்‌ மக்களெல்லாம்‌ தொட்டுத்‌ தொடர்ந்து துலங்க முடித்திடுவர்‌ என்னும்‌ செய்தியினை எடுத்துரைக்கும்‌ லோகயுத்தம்‌ இன்னுயிர்த்‌ தோழர்களே ! எம்புரட்சி வாழ்த்துமக்கு ! அச்சமில்லை சந்தேகம்‌ அணுவள வேனும்‌ இல்லை கொச்சை அபாயம்‌ குலவுகின்ற காலத்தின்‌ சீறுகின்ற பார்வை “திருதிருத்து'ப்‌ போகிறது. பேருலகப்‌ பொதுமக்கள்‌ நீரிருந்த ஸ்தானத்தில்‌ வந்துவிட்டார்‌. இன்று வன்பகைவர்‌ கோட்டையுள்ளே புன்செருக்கு அழிவின்‌ போக்கைக்‌ குறிக்கிறது; சீற்றக்‌ கண்மூர்க்கம்‌ தீத்தோல்வி காட்டுகிறது. போற்றரிய உங்கள்‌ பொன்னான தியாகந்தான்‌ வெற்றி-உலக மக்கள்‌ வெற்றிக்கு முன்னுரையை இன்றே எழுதிவிட்ட (து)! என்றென்றும்‌ பெருமை ! வெற்றி விறல்‌ கோழர்களே, வெல்க புரட்சி வாழ்த்துமக்கு !

151

151