பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைதீக நீலிக் கண்ணீர் மாலைக்கண் வைதீக நீலிக்கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்துமே போச்சே ! காலம் செல்லச் செல்லக் கோலம் புரள்வதை காட்டும் நவயுக மாச்சே! அஞ்ஞானம் பெற்றிட்ட அப்பு அழுக்குகள் அத்தனையும் அற்றுப் போச்சே ! விஞ்ஞானத்தின் வழி மெய்ஞானத்தின் வாழ்வில் வீறுஞ் சுகிர்தமு மாச்சே ! வேதிய னோடு மடாதிபதி பொய்யர் வீணர் பிலுக்குகள் போச்சே! சாதி மதமறி யாது வொழுகிடத் தக்க சமத்துவ மாச்சே! தீமை செய்யும்முத லாளிமார் டம்பங்கள் திக்கெட்டும் 'புஸ்' என்று போச்சே! ஊமைத் தொழிலாளர் சேமநிலை நாடி ஒன்றாய்த் திரண்டிட லாச்சே! பொல்லா ஜமீன்கொழுப் பெல்லா முருகிப்பின் போஞ்சு கதையாகிப் போச்சே! 164 (மாலை)

V

164