"சொன்னிங்க. நான்தான்......."
"நான் சொன்னேன்,நீ கேட்டுப் பாத்தூட்டு வந்து விட்டே, துரைமகன் இல்லை! யாருவீட்டு முதலு"
"வாடகை வந்ததுன்னு சொன்னேனே"
"வாடகை வந்தாச்சா?ஏண்டா! மாமாட்டம் நிக்கறே? வாடகை வாடகைன்னு நான் வரட்டுக் கத்து கத்தறேன்; வாயை மூடிகிட்டு இருந்தூட்டு, இப்போ வாடகை வந்ததுன்னு இரகசியம் பேசறே!"
"அப்பவே சொன்னேனுங்க சேலத்து ஆசாமிங்க இருந்தாங்களே......."
"ஏண்டா! அவனுங்க எதிரிலேயா சொன்னே? சொல்லலாமா? அவனுங்க எதிரே இதை எல்லாம் சொல்லலாமா?
"அதுக்காகத்தான்: மெதுவாச் சொன்னேன்?"
"என்னத்தைச் சொன்னயோ! இழவு. என்ன கொடுத்தான் வாடகை?"
"68" (அறுபத்தெட்டு)
"அதென்னடா 2 ரூபா குறைவு"
"சுண்ணாம்பு அடிச்ச செலவாம்"
"யாரு அடிக்கச் சொன்னதாம்"
"சானிடரி இன்ஸ்பெக்டர் நோடிசு அனுப்பினாராம்??"
'அடே! எந்த நோடிசு வந்தா எனக்கென்னடா? நான் சுண்ணாம்பு அடிக்கச் சொன்னேனா?"
"இல்லைங்க"
19