பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சொன்னிங்க. நான்தான்......."

"நான் சொன்னேன்,நீ கேட்டுப் பாத்தூட்டு வந்து விட்டே, துரைமகன் இல்லை! யாருவீட்டு முதலு"

"வாடகை வந்ததுன்னு சொன்னேனே"

"வாடகை வந்தாச்சா?ஏண்டா! மாமாட்டம் நிக்கறே? வாடகை வாடகைன்னு நான் வரட்டுக் கத்து கத்தறேன்; வாயை மூடிகிட்டு இருந்தூட்டு, இப்போ வாடகை வந்ததுன்னு இரகசியம் பேசறே!"

"அப்பவே சொன்னேனுங்க சேலத்து ஆசாமிங்க இருந்தாங்களே......."

"ஏண்டா! அவனுங்க எதிரிலேயா சொன்னே? சொல்லலாமா? அவனுங்க எதிரே இதை எல்லாம் சொல்லலாமா?

"அதுக்காகத்தான்: மெதுவாச் சொன்னேன்?"

"என்னத்தைச் சொன்னயோ! இழவு. என்ன கொடுத்தான் வாடகை?"

"68" (அறுபத்தெட்டு)

"அதென்னடா 2 ரூபா குறைவு"

"சுண்ணாம்பு அடிச்ச செலவாம்"

"யாரு அடிக்கச் சொன்னதாம்"

"சானிடரி இன்ஸ்பெக்டர் நோடிசு அனுப்பினாராம்??"

'அடே! எந்த நோடிசு வந்தா எனக்கென்னடா? நான் சுண்ணாம்பு அடிக்கச் சொன்னேனா?"

"இல்லைங்க"

19