இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செட்:- நாட்டியங்கூட........
குரு:- நடறாஜ தாண்டவந்தான்.
செட்:- நல்ல சுபாவந்தான்; ஆனா பணத்திலேகொஞ்சம் நிகா.
குரு:- அது சகஜம்; செட்டியாரவாள்! நாளைக்குப் பஞ்சாமிருத அபிஷேகத்துக்கு அவளும் வர்ரா.
செட்:- பலே! அப்ப, ரொம்ப ஜோராச் செய்துடனும்.
குரு:- பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவோ?
செச:- (குமாஸ்தாவைக் கூப்பிட்டு) ஐயரிடம், ஐம்பது ரூபா.....
குரு:- இன்னம் ஒரு இருபத்தைந்து சேர்த்துத் தாருங்கோ.
செட்:- அவ்வளவுக்குச் செலவு இருக்கோ?
குரு :- எல்லாம் அவளும் நானும் சேர்ந்து பட்ஜட் போட்டிருக்கிறோம்.
செ:- அப்போ அதுக்கு அப்பீல் கிடையாது!
ஐயர் எழுபத்தைந்து வாங்கிக்கொண்டு போனபிறகு,செட்டியார் கடைவீதிப் பக்கம் தமாஷாக நடந்து போய், நண்பர்களைக் கண்டு பேசிவிட்டு, வீடு சென்றார்.
22