பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொய்—இலாப நஷ்டம்

வேலாயுதம், எப்படியாவது அந்தப்பண்ணையை வாங்கி விடத்தான் வேண்டும்என்று தீர்மானித்துவிட்டார். அந்தப்பண்ணையிலே, தங்கச் சுரங்கம் இருப்பது அவருக்குத் தெரியும். படாடோப வாழ்வினால் கடனாளியாகிவிட்ட பண்ணைச் சொந்தக்காரனுக்கு தெரியாது. என்ன விலை கொடுத்தாகிலும் வாங்கிவிடுவது என்று, சொந்தக்காரனின் மாளிகைக்குப் போனார். இருவரும் பேசுகிறார்கள்

"ஓ! வேலாயுதம் அவர்களா? வரவேண்டும், வரவேண்டும்! தாங்கள் வரப்போவதாகச் சொன்னார்கள்"

"நான் வருவதாகவா? இல்லையே! இந்தப் பக்கம் ஒரு காரியமாகச் செல்ல நேரிட்டது. அப்படியே தங்களையும் பார்த்துவிட்டுப்போகலாம் என்று வந்தேன், தற்செயலாகத்தான்"

அப்படியா? நமது கணக்கப்பிள்ளையிடம், இந்தப் பண்ணை விஷயமாக பேசவேண்டும் என்று சொன்னீராமே. அதற்காகத்தான் வந்தீர்கள் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டேன்"

அதைச் சொன்னாரா? இந்தப்பண்ணை சம்பந்தமாக ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.....

23