பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அது உண்மைதான்; உமாபதிச் செட்டியார் ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்துக் கேட்டார்......"

"ஒரு லட்சத்துக்கா! ஜெமீன்தாரவாள், தயவுசெய்து என் பேச்சைக் கேளுங்கள். யோசனையே வேண்டாம், விற்று விடுங்கள், நல்ல விலை"

"எது நல்லவிலை? ஒரு இலட்சத்து ஒன்பதாயிரமா,ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரமா? சேட் அமார்சந்த் அந்த விலை கேட்டு, தரமுடியாது என்று அனுப்பிவிட்டேனே, பதினைந்து நாட்களுக்கு முன்பு"

"ஜெமீன் தாரவாள்! தங்களுக்கு ஒன்றும் இந்தப் பண்ணையை விற்றுத்தான் ஆகவேண்டும் என்பதில்லை. இதிலே 'இலாபம்' வந்து, என்ன ஆகப்போகிறது, நான் ஏன் அதைப் பத்தாயிரம் போனாலும் வந்தாலும் விற்றுவிடச் சொல்கிறேன் என்றால், போனமாதம் ஒரு பயங்கரமான விஷயம் கேள்விப்பட்டேன், பண்ணை சம்பந்தமாக அதிலே ஏதோ ஒரு பூதம் குடிஏறி இருக்கிறதாம். ஆளைக் கொல்லுமாம் அது"

"பூதமாவது, குடிஎறுவதாவது?"

"மஞ்சள் நிறமாம்,பளபளப்பாக இருக்குமாம், ஆளைக் கொன்றுவிடுமாம். தக்கவரொருவர் சொன்னார். அடடா! நம்ம ஜெமீன்தாரருக்கு, இந்தச் சனியன் பிடித்த பண்ணையே வேண்டாம் என்று எண்ணினேன். அதனாலேதான் கணக்கப்பிள்ளையிடம் சொன்னேன், அப்பா! எப்படியாவது ஜெமீன்தாரிடம் சொல்லி, அந்தப் பண்ணையை விற்றுத் தொலைத்துவிடு என்று"

"நீங்களே வாங்கிக்கொள்வதாக....."

24