பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நானா? நான் பிள்ளை குட்டிக்காரன், பூதம் குடியிருக்கும் பண்ணையை வாங்குவது என்றால், பயமாக இராதா"

"சொன்னானே கணக்கப்பிள்ளை......."

"நான் சொன்னது வேறே. எப்படியாவது அந்தப்பண்ணை நம்ம ஜெமீன்தாரர் கையைவிட்டு மாறிவிடவேண்டும்; அப்போதுதான் அவருக்கு ஆபத்து வராது. யாரும் விலை கொடுத்து வாங்க உடனே கிடைக்காவிட்டால், நான் வாங்கி வைக்கிறேன். நான் சிலருக்குக் கடன் தர வேண்டி இருக்கிறது, கடனைத் திருப்பித் தரும்படி அவர்கள் கேட்பரர்கள், அப்போது, இந்தச் சனியனை அவர்கள் தலையிலே கட்டிவிடுகிறேன். எப்படியாலது பூதப்பண்ணை, ஜெமீன்தாருக்குக் கேடு செய்வதற்குள், அதை விற்றுவிடவேண்டும் என்று சொன்னேன்"

"எனக்கு அம்மாதிரி விஷயத்திலே நம்பிக்கை கிடையாது. அதற்காகப் பண்ணையை விற்கவேண்டுமென்ற அவசியமும் கிடையாது. ஆனால்,நான் பாரீசில்போய் வசிக்கத் தீர்மானித்திருக்கிறேன். அவ்ளைவு தொலைவிலே இருந்து கொண்டு பண்ணையை நிர்வகிக்க முடியாதே, பாழாகிவிடுமே, என்பதற்காகத்தான், அதை விற்றுவிடுவோம் என்று எண்ணுகிறேன். திரும்பவும், வந்த உடனே வாங்கிவிடலாம் என்ற எண்ணம். வேறொருவர் கைக்கு மாறினால் நன்றாக இராதே. வேலாயுதம் நமக்கு நீண்ட நாள் சிநேகமாயிற்றே, அவருக்கு விற்றால், பிறகு வேண்டும்போது திரும்பி வாங்கிக்கொள்ளலாமே என்று நினைத்தேன்"

"தாங்கள் சொன்னால், அதன்படி நான் நடக்கிறேன், இதற்கென்ன?"

"விலை, உங்க விஷயத்துக்கு, ஒரு இலட்சம்"

"என் சக்தி அவ்வளவுக்கு இடந் தராதே"

25