பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"பிறகு தங்கள் இஷ்டம்"

"என்னாலே அவ்வளவு தொகை தர முடியுமா? பணம் ஏது? ரொக்கம் இருப்பது அறுபதாயிரம்! கொஞ்சம் வைரம் இருக்கிறது. பரம்பரையாக இருப்பது, விற்க மனம் இல்லை, இந்தச் சமயத்திலே அதை விற்றால், மொத்தத்தில் ஒரு இலட்சம் கிடைக்கும். ஆனால்,யார் இருக்கிறார்கள் வாங்க"

"எனக்கு வைரமென்றால் உயிர்! ஆனால்,விஷயம் என்ன தெரியுமோ? நம்ம ஜோதிடர், ஒரு விஷயம் சொல்லி விட்டார்; இன்னும் ஒரு ஐந்து வருஷத்துக்கு, நான் வைரம் வாங்கவே கூடாதாம், என் ஜாதக பலன் அப்படி இருக்கிறதாம். அதனாலே நான் நமது ஜெமீன் வைரத்தை எல்லாம் ஜெயவீரச் செட்டியாரிடம் கொடுத்துவிட்டேன்.யாருக்காவது விற்றுவிடுங்கள் என்று"

"சரி! நான் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் நாளைக்கு. இதற்குள் யாராவது விலை பேசினால்...."

"நீ வேண்டுமென்று கேட்டுவிட்ட பிறகு, வேறொருவருக்கு விற்பேனா?"

இல்லை, ஜெமீன் ர்வாள், வேறு யாராவது கேட்டால் தயவுசெய்து விற்றுவிடுங்கள்! எனக்குச் சிரமம் இராது. அப்போது. போய் வருகிறேன்"

பண்ணை ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது; வேலாயுதத்துக்கு அல்ல! அவரால் ஏவிவிடப்பட்ட அவருடைய ஏஜண்டுக்கு, பட்டா ஏஜண்டின் பேரில்; பண்ணையின் உண்மைச் சொந்தக்காரர், வேலாயுதமேதான்.

26