பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓம்! சித்திவிநாயகர் துணை.

இதனால் சகலமான கனதனவான்களுக்கும். பக்திமான்களுக்கும், குலச்சிரேஷ்டர்களுக்கும், அன்புடன் தெரிவித்துக்கொள்வதாவது:

நமது நகரக் கோடீஸ்வரர், அன்னதானம் செய்து அகில முழுதும் புகழ்பெற்ற கலிகாலக் கர்ணப் பிரபு, "சொர்ணவர்ண லேகியம்" கம்பெனியின் சொந்தக்காரர், சொக்கநாதஞ் செட்டியார் அவர்கள், இதுவரை செய்திருக்கிற ஏமாளமான தர்ம காரியாதிகளைக் கண்டு மகிழ்ந்து, நமது ஊர்ப் பண்டிதர்கள், ஞானிகள், பிரபுக்கள், மகாஜனங்கள் ஆகியோர் கூடிய மகாசபையில், அன்னாரின் கருணையைப் பாராட்டி, தர்மபூபதி என்று அவருக்குப் பட்டம் அளிக்கப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் மேற்படி வைபவத்துக்குத் தங்கள் இஷ்டஜன பந்து மித்ராளுடன் வந்திருந்து, அவரை வாழ்த்துவதுடன், பட்டமளிப்பு வைபவ விழாவிலே கலந்து கொண்டு கரிமுகப் பெருமானின் கடாட்சத்தைப் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம். பட்டமளிப்பு விழா, பழிதீர்த்த பிராட்டியார் கோயில் பழைய மண்டபத்தில் நாளை மாலை (5-1-1925) 6 மணிக்குமேல் நடைபெறும் பட்டமளிப்பு விழா முடிவில், "பன்னிரு கையும் என்னிரு கையும்" என்பதுபற்றி, பரந்தாம சாமிகள் பாடுவார்; இடையிடையே பேசுவார். பாண வேடிக்கை இரவு 11 மணிக்கு உண்டு. மாலை 5 மணியிலிருந்து பாழாகா ஊர் பாண்டு வைத்தியம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் தவறாது வருக!

சுபம்!!

இங்ஙனம்
பட்டமளிப்போர்

வெற்றிவேல் பிரஸ். 5000.

36