பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் ஈஸ்வரனுக்கே அர்ப்பணம்

ர்மபூபதி பட்டம் பெற்றவரும், ஏழேழு தலைமுறைக்கும் கீர்த்தி கிடைக்கக்கூடிய அன்னதான கைங்கரியம் செய்து அகிலமெங்கும் புகழ்க்கொடி நாட்டியவரும், ஆண்டவனின் அருளையும், அடியார்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றவரும், சித்த ஆயுர்வேத யூனானி முறைகளோடு கைலாய பரம்பரை முறை எனும் அபூர்வ வைத்தியமுறை தெரிந்தவருமான, தர்மபூபதி, அன்னதான அரசர், அகிலம் புகழும் சித்தாதி வைத்தியகுரு, பக்தவிலாச சொக்கநாதஞ் செட்டியார், பௌர்ணமிதோறும் தயாரித்து பூலோகமெங்கும் தந்து உதவும், சொர்ணவர்ண லேகியம் ஒரு டப்பா சாப்பிட்டவர்கள் தேவாமிருதம் சாப்பிட்டவர்கள் பெறக்கூடிய திவ்யதேஜசும், புதிய பலமும் பெறுவதோடு, நெடு நாளைய நோய் போக்கப்பெற்று, தங்கம் போன்ற மேனியும் இரும்புபோன்ற வலிவும் பெறுவதுடன், சிவானுக்கிரகமும், இஷ்டசித்தியும் பெறுவார்கள். இந்த லேகிய முறை, நமது தர்மபூபதிக்கு, அவருடைய பதினாறாம் வயதிலே பாம்பு உடலும் மனித முகமும் கொண்ட சர்ப்ப தேவர் சொப்பனத்திலே சொன்னது. இந்த லேகிய வியாபாரம், நமது அதிலம் புகழும், அன்னதான அரசரின் சொந்த இலாபத்துக்கு அல்ல. இதிலே கிடைப்பது அவ்வளவும் அன்னதான கைங்கரியத்துக்கே செலவழிக்கப்படும். ஆகவே சொர்ணவர்ண லேகியம் வாங்கி, சர்வரோக நிவாரணம் பெறுவதுடன், புண்ணியமும் அடையுங்கள்.

40 நாள் சாப்பிடக்கூடிய 1 டப்பி விலை ரூ, 6-0-0

ஏக காலத்தில் 3 டப்பிகள் வாங்குபவருக்கு மகிமையுள்ள உருத்திராட்சமாலை இனாமும் அளிக்கப்படும். முந்துங்கள்!.

சொ. வ. லே. கம்பெனி,

வெற்றிவேல் பிரஸ். 20000.

37