பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எச்சரிக்கை!

உஷார்!!

மாகாஜனங்களே!

தர்மபூபதி என்றும், அன்னதானம் செய்பவரென்றும், விளம்பரப்படுத்தப்பட்ட சொக்கநாதஞ் செட்டியாரின் குட்டு வெளியாகிவிட்டது.

சிங்கப்பூரில் கொள்ளை அடித்து,ஜெயிலிலிருந்து ஓடிவந்து விட்ட சொக்கன் என்ற பண்டாரமே, இப்படி ஊரை ஏமாற்றிவந்தான்.

அவன் விற்றுவந்த சொர்ண வர்ண லேகியம், அபினி கலந்தது என்று கவர்மெண்டார் கண்டு பிடித்துவிட்டனர். அவன்மீது வாரண்டு புறப்படவே, சொக்கன் கம்பி நீட்டிவிட்டான். போகுமுன்பு,வீட்டிலே வைத்திருந்த ரொக்கம் நகை யாவும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். அவனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு, 500-ரூபாய் இனாம்!

ஆள் அடையாளம்

சிகப்பாக, நடுத்தர உயரமாக இப்பான்.

இடது கையிலே, பச்சை குத்தப்பட்டிருக்கும், பாம்பு உருவில்.

சித்தவைத்தியனென்றும் மாந்திரீகம் தெரியுமென்றும் சொல்லிக்கொள்வான்.

இப்படிப்பட்ட அடையாளமுள்ளவனை கண்டால் உடனே போலீசுக்குத் தெரிவியுங்கள். உஷார்! உஷார்!

இப்படிக்கு
பொதுஜனப்பிரியன்.

வெற்றிவேல் பிரஸ் 3000

38