பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பர்களே! இனியேனும், இத்தகைய ஆஷாடபூதிகளை நம்பி மோசம் போகவேண்டாம்.

இப்படிக்கு
விழித்துக்கொண்டவன்.

"இதென்ன சார்! எதுவோ ஆஸ்ரம நோடீஸ் எடுத்துக்கொண்டு வந்துவிட்டு, இப்போ வேறே விதமாக அதற்கு நேர்மாறாக ஒரு நோடீஸ் எழுதி இருக்கிறீர்களே" என்று கேட்டார் வெற்றிவேலார்.

"ஐயா! உங்கள் பிரசின் வேலைத் திறமைக்கு அத்தாட்சியாக நீர் கொடுத்தீரே, புத்தகம் அதிலே, சொக்கன் திருவிளையாடல் பற்றிய 4 நோடீசுகளைக் கண்டேன்.கண் திறக்கப்பெற்றேன். ஒரு அயோக்யன், அன்னதானம் செய்வதாக விளம்பரம் செய்து ஊரை ஏமாற்றி, பட்டம் பெற்று, அந்த விளம்பரத்தை வைத்துக்கொண்டு, அபினி கலந்த லேகியத்தை விற்றுக் கொள்ளை இலாபம் பெற்றுக் கொழுத்து, கடைசியில் போலீசாரால் துரத்தப்பட்டான். என்ற வரலாற்றை வெற்றிவேல் பிரசிலே வெளியான 4 நோட்டீசுகள், நன்கு விளக்கிவிட்டன. அதே சிங்கப்பூர் சொக்கன் இப்போது எங்கள் ஊரிலே, என் தோட்டத்திலே 'சாது' வேஷத்திலே இருக்கிறான். நான் சூதுவாதறியாதவன். அவன் பேச்சைக் கேட்டு நம்பி, அங்கு சேவாசிரமம் வைப்பதாக ஒப்புக்கொண்டேன். அதற்கு நோட்டீஸ் போடவே வந்தேன். இங்கே வந்த பிறகுதான் அவனுடைய மோசம் தெரிந்தது. ஆகையினால், ஆஷாடபூதிகளை நம்ப வேண்டாம் என்று அனைவருக்கும் யோசனை கூறப் புதிய நோட்ஸ் போடுகிறேன்" என்று நான் விளக்கமுரைத்தேன். வெற்றிவேல் பிரசிலிருந்து என் எச்சரிக்கை நோட்டீஸ் வெளிவருவதற்குள், எப்படியோ விஷயமறிந்துகொண்டு, 'சாது'மறைந்துவிட்டான்.



41