"ஜெபமாலை! ஏன் உனக்கே உன் சக்தியிலே, சந்தேகம்? வேண்டாம். நீ இருக்குமட்டும் எனக்கு ஒருகுறைவுமில்லை,"
"அதுதான் தவறு என்று சொல்கிறேன். காலம் இப்படியே இராது. ஜெபமாலையிடம் காட்டும் அன்பு வெறும் வேஷம், உண்மையான அன்பு தங்கத்திடம் என்று ஊரார் தெரிந்துகொள்வார்கள். இப்போதே அந்தத் தெளிவு ஏற்பட்டுக்கொண்டுதான் வருகிறது!"
"ஜெபமாலை! நீயா இப்படிப் பேசுகிறாய்? நீ யாருடைய மகள்? எப்படிப்பட்ட குடும்பம்?"
"கோபுரநாதருக்கேகூடத்தான், இப்போது குறைந்து வருகிறது செல்வாக்கு."
"ஏன்?"
"ஏன்! ஜெபமாலை போன்ற மகளை, உன்போன்றவர்ளுக்குத் தந்துவிட, அந்தச் சம்பந்தத்தை துணையாக வைத்துக்கொண்டு, நீ ஊரை ஏமாற்றுவைத்தால்தான்"
"நான் என்ன ஏமாற்றினேன், ஜெபமாலை?"
"விரிவாகக் கூறவா? வயிறு எரிகிறது. ஊராரின் உபத்திரவம் அத்தனையையும், கோபுரநாதரிடம் எடுத்துக் கூறித் தீர்த்துவிடுவதாகக் கூறுகிறாயல்லவா?"
"ஆமாம்."
"ஊரார், ஏன் நம்புகிறார்கள்? உன் திறமையை மதித்தா?"
"இல்லை! என்னுடன் நீ இருப்பதால்,"
"ஊராரின் தொல்லை தீருகிறதோ?"
"இல்லையென்று தான் சொல்லவேண்டி இருக்கிறது."
6