பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 201

நல்லகாலம் !

கதை முடிந்து விட்டது ! கடவுளே. :- தமிழ்க்கடவுளே ! தமிழ்த் தாயே 1. இந்தத தமிழ்ச் சமுதாயத்திற்கு இன்றைய நிலையில் இம் மாதிரியான மேனகைத் தாசிகள் தேவையில்லை யென்னும் தார்மீக உண்மை நிலையை, அப்போதே சாங் கோபங்கமாகவும் தீரத்தெளியவும் அடித்துச் சொல்லி எடுத்துக் காட்டி, வேசி மேனகாவை ஒடு. ஒடு ‘ என்று துரத்தி விரட்டியடித்த நமது அருமைத் தமிழ்ச் சமுதாயத் திற்கு. அதாவது, நல்ல மனிதர்களே நல்லதொரு சமுதாய மாக ஆகி வரும் பெருமை மிக்க நமது தமிழ்ச் சமுதாயத் திற்கு என் நன்றியறிவை இந்நேரத்திலும் மீண்டும் தெரிவித்துக் கொள்வேன்!

நம்முடைய வழி வழி வந்த பாரம்பரியப் பண்புக்கும் பண்பாட்டுக்கும் பொருந்தாத, பொருத்த முடியாத, பொருந்தக் கூடாத விபசாரத்தை சமர்த்தாகவே நியாயப் படுத்திச் சகோதரிகள் சிவசங்கரியும் இந்துமதியும் கூடிக் குலவித் தயாரித்த இரண்டு பேர்’ என்கிற குமுதமான தொடர்கதைக்கு இப்படியும் ஒரு விமரிசனம் வந்ததைச் சோதரிகள் மறந்திருக்க மாட்டார்கள் : இரண்டு விலை மாதர்கள் சேர்ந்து ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும் ?- இரண்டு பேர் தொடர் மாதிரி இருக்கும் !”

சிவசங்கரி இப்போதாவது ஆற அமரச் சிந்தித்துப் பார்ப்பது நலம். - -

ஒரு வேளை, இந்துமதிக்கும் இனக்கவர்ச்சி முரண் களின் பாற்பட்ட அசிங்கமான வெறி தணியத் தொடங்கக் கூடும் ! r -

தலை நகர்த் தம்பதி டாக்டர் சாலை இளந்திரையன் -டாக்டர் சாலினி இளந்திரையன் அண்மையில் பேசிய வற்றையும் நான் எடுத்துக் காட்ட வேண்டிய நல்ல நேரம் இது : - - - - -