பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





3: நளினி !





க. ந.சு:


புதுமைப் பெண் அல்லள் ந ளி னி. திருடனைக் கணவனாகக் கொள்ள முடியாமல் ஓடி விட்ட பெண் ! அவள் பாவாடை கட்டிய சிறுமியாக இருக்கும்போது, சீதாராமன் என்னும் கதாநாயகன் பருவதத்தம்மாள் என்கிற தன் மூத்த சகோதரி வீட்டுக்கு வண்டியில் வந்து இறங்குகிறான். பாவாடை கட்டிய வளர்ந்த பெண் நளினி, எதிர் வீட்டில் நிற்கிறாள்.

நளினி தாயை இழந்தவள் : ஒரு வகையாக வளர்ந்தவள், முரட்டுப் பிடிவாதத்துடன் ! கையில் சின்னம்மாவின் குழந்தையுடன் நிற்கிறாள். “அதோ பாருடா பட்டணத்து மாமா!” என்கிறாள் குழந்தையிடம். “தேவலையே ! வாயாடிப் பெண்ணாக இருக்கும் போலிருக்கே ! வளர்ந்த பெண்ணாகவும் இருக்கிறதே !” என்று சொல்லிக் கொண்டே போகிறான் சீதாராமன். அந்தப் பட்டணத்து மாமாவையே மணந்து கொள்கிற நிலை நளினிக்கு வந்து விடுகிறது. பெண்ணின் தகப்பனார் நல்ல உழைப்பாளி. வேலை செய்து ஒய்கிற அனுபவம் அவருக்கு.

அன்றே சீதாராமனைப் போலீஸ் தேடி வருகிறது. விஜயபுரம் அக்கிரகாரத்துக்கு. தவறேஜெ-5