76Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை
விடுகிறார் ; ஆனால் ஒர் இரகசியம். க. நா.சு. ஒரு நாளும் காந்தியாக முடியாது !
பாத்திர அமைப்பைப் பற்றிப் பிறருடைய நவீனங்களில் குறைகாணும் திரு. க. நா. சு. தம் பெயரை அறவே மறந்து விடுகிறார். தம் சொந்தக் கருத்துகளுக்குப் பிறர் நூல்களை மேடையாக்கி அதிகப் பிரசங்கம் செய்கிறவர் இவர். தமிழ் நூல்களை முறையாகக் கற்றுத் தேர்த்து தெளிந்து, இப்போது தமிழ் வளர்க்கும் தகைமையாளர்களாக நம்மிடையே திகழ்ந்து வருபவர்கள் சிலரை வம்புக்கு இழுத்திருக்கிறார் : தமிழ் ஞானம் எழுத்தாளனுக்கு அறிவைக் கொடுக்காது என்பது இவர் வாதம். இது முடக்கு வாதம் ! ‘நளினி'யைப் படித்து முடிக்க ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வோர் அரையனா எனக்குச் செலவு ஆயிற்று. (1958) -
திரு க. நா. சு. வின் தமிழ் நடையைப் படிக்கிறீர்களா ?
“...வீவு கிடைத்த சந்தர்ப்பத்திலே, தன் சகோதரியை பார்த்து எவ்வளவோ நாள் ஆகிறதே, பார்த்துவிட்டு, அவளுடன் இரண்டொரு நாள் தங்கிவிட்டுப் போகலாம் என்று எண்ணி வந்திருந்தான் சீதாராமன்,’ .
உன்னிப்பாக படியுங்கள். விரசம் தட்டவில்லையா ? இன்னும் பாருங்கள் :
“...ஆனால் அதெல்லாம். ஏதோ காவியம் படிப்பது போல அவர்கள் உள்ளத்தைத் தொடாமல் போய் விட்டது ‘
அமரர் புதுமைப்பித்தனின் ஒப்புவமை எந்த மூலை, போங்கள் !
எண்ணை மில் ஒன்று :