பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



பொய்மை கொண்ட கலி !

‘என் அகக் கண்ணில் நளினி புதுமைப் பெண் அல்ல ; என்றும் இருந்து, வந்திருக்கின்ற இந்தியப் பெண்மணிதான் என்று சொல்கிறார் நாவலாசிரியர். புதுமைப் பெண் என்றாலே, அவளும் இந்தியப் பெண்மணிதான் ; ஆனால், இவரோ புதுமைப் பெண்ணை ஏனோ துண்டு படுத்திக் காட்டுகிறார். பொய்மை கொண்ட கவிக்கு ஒரு விடிபொழுதெனச் சொற்களும் செய்கைகளும் ஏத்தி நிற்பவள் புதுமைப் பெண்தான்

இப்ஸன் வழி

தேம்ஸ், மிஸிஸிப்பி, நைல் போன்ற மேலைநாட்டு ஆறுகள் ‘பாவம்’ செய்தவை ; அதனால்தான், திரு க.நா. சு. அங்கே பிறப்பெடுக்கவில்லை. தமிழ்நாட்டில் அவதரித்தார்.விட்ட குறை, தொட்டகுறையின் விளைவாக மேலை நாட்டு இலக்கியத்தில் கரைகாணத் துடிக்கிறார் மதிப்புப் பெற வேண்டும். ஆனால், இப்ஸன் (Henryk Ibsen) தம் நாடகம் ஒன்றில் கதவடைப்பைச் சித்திரிக்கின்றார். அதில் உயிர் இருக்கிறது. இங்கே இவர் காட்டும் ‘அடைந்த கதவு’க்குப் பின்னேதான் கதையின் முடிவே ஒளிந்து கொண்டிருக்கிறதாம். சொல்லுகிறார் இவர் எழுதிய‘வரவேற்பு’ என்னும் சிறுகதையிலும் கதவடைப்பு நிகழ்ச்சி வருகிறது. அது அற்புதம்!

இன்னொன்று : கதவை ஓங்கிச் சர்த்திவிடும் உரிமை. பெண்ணுக்குக் கிடைத்திருப்பதைப் பெருமையாகப் பேசுகின்ற க. நா. சு. அவர்கள், அந்தப் பெருமையை உரிய வழியில், உரிய முறைப்படி, உரிமையாக்கத் தவறி விட்டார்; அவருக்கு இப்பணி பிடிபடவில்லை !