பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அபாண்டத்தைப் பற்றி எண்ணி வ ரு ந் தி க் கொண்டே வீடு சென்றார். வஸ்தாத் பாவாடை யின் வஞ்சகப் போதனையால்தான் பட்டாமணியம் இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்பது அவருக்குத் தெரியுமா என்ன?

இரவு எட்டு மணிக்குள் வசந்தி தன்னுடைய அறைக்குச் சென்று நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கிவிட்டாள். சமீப நாட்களாகப் பரீட்சைக்காக இரவு நீண்டநேரம் கண்விழித்துப் படித்த அலுப்யு அவளுக்கு.

ஆனால் சங்கர் மட்டும் தூக்கம் வராமல் அந்தக் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந் தான். அவனுடைய தூக்கமின்மைக்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று- -

அன்று மாலையில், விளக்கு வைக்கிற வேளை யில் தற்செயலாக அவன் கேட்க தேர்ந்த பயங்கரச் செய்தி. மற்றொன்று சமீப நாட்களாக அவன் தன்னுடனேயே சதா மூடி வைத்துக் காப்பாற்றி வரும் ஒரு ரகசியம். இரண்டுக்கும் அவனால் என்ன செய்வதென்றே புரியவில்லை.

இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு சுவரிலிருந்த கடிகாரம் டாண் டாண்’ என்று பதினொன்றடித்து அப்பொழுது திடீரென்று, தெருவில் சர் சர்’ என்று சப்தம் கேட்கவே, சங்கர்