பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இவை நல்ல நோட்டுக்களானால், இந்தப் பொல்லாதவர்கள் கையில் இந்த வேளையில் இவை இருக்கக் காரணம் என்ன? ஒருவேளை இந்த இரண்டுபேருமே எங்கேனும் ஒரு செல்வந்தர் விட்டில் கன்னம் வைத்துத் திருடிக் கொள்ளை யடித்துக் கொண்டு வருகிறார்களோ?-எப்படி இருந் தல்ை என்ன, கையில் கிட்டிய பொருளைத் தெருவில் போட்டுவிட்டுப் போகக்கூடாது. வருவது வரட்டும்’ என்று பலவாறு எண்ணியபடியே வீட்டை அடைந்த சங்கருக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.

பூனை போல் உள்ளே நுழைந்து தன்னுடைய அறைக்குள் சென்று கற்றை நோட்டு ளையும் பத்திரப் படுத்திவிட்டு, வசந்தியின் அறைக்குள் தலையை நீட்டியபோது

அவன் படுத்திகுந்த படுக்கை காலியாக இருந்தது.