பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இங்கே யிருந்து போயிட்டா அதனாலே அப்பாவுக்கு என்ன கெடுதல்?” “அசட்டுக் குழந்தே, அந்தப் பாவிப் பயல் சும்மாவா ஒடிப்போயிருக்கான்? உங்க அப்பாவோட அத்தனை ரகசியத்தையும் தெரிஞ்சுண்டு போயிருக் கான்!”

அப்படி என்ன பாட்டி அப்பாவோட ரகசியம்?:

ஒண்ணா, ரெண்டா? . உங்கப்பா கிட்டே இருக்கிறது அத்தனையும் ரகசியம்தான். அத்தனை யும் தப்புத்தண்டா தான். அதையெல்லாம் காப்பாத் தத்தான் என்னையும் பாவாடையையும். இன்னும் ஒரு பட்டாளத்தையும் கட்டி வெச்சு உங்க அப்பா சோறுபோடறாரு!” 'அதுதான் என்ன ரகசியம்னு கேக்கறேன்?வசந்தி சற்றுக் கோபமாகவே கேட்டாள். 'உனக்கு அவசியம் தெரிஞ்சு தான் ஆகனுமா? உங்கப்பாவுக்கு நான் சொன்னது தெரிஞ்சா என் முதுகுத் தோலை உரிச்சுக் கொடியிலே உலத்திப் பிடுவார்!’ சத்தியமா நான் உன்னைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் பாட்டி...” வசந்தியின் குரல் கெஞ்சுவது போலிருந்தது. கிழவி அவள் காதருகில் சென்று மெல்லக் கிசு கிசுத்தாள்'; கள்ளநோட்டு அச்சடிக் கறாரு. நாகப்பட்டிணத்திலே கப்பல் வந்ததும்