14
மாமிசமலைபோன்ற வஸ்தாது - தண்டால் எடுத்துத் தண்டால் எடுத்துச் சேர்த்து வைத்தி ருந்த தன் முண்டாவைக் காட்டியே அல்லவா இத்தனை காலம் ஊரை ஏமாற்றி வந்திருக்கிறான்! ‘ஒரு சின்னப் பையன், நிமிஷ நேரத்தில் கழுதை மாதிரிப் புரட்டி எடுத்து விட்டானே!’ என்று. கூடியிருந்தவர்களுக்கு வியப்பு.
பட்டாமணியத்துக்கு முன்பு மீண்டும் தன் னுடைய வீரத்தை நிலைநாட்ட எண்ணங் கொண்ட பாவாடை, டேய் கழுதை! என்ன செய்யறேன் பாரு!’’ என்று ரோசத்தோடு முஷ்டியை முறுக்கிக் கொண்டு சங்கரின் முகத்தைக் குறிவைத்தான்.
ஆனால் சங்கர் வெகு அலட்சியமாகந் தன் னுடைய இடது கையினாலேயே ஒரு தட்டுத் தட்டி விட்டான்.
"ஐயோ...அம்மா...?? என்று, இரும்புத் தண்ட வாளத்தினால் அடிபட்டதுபோல் வ ஸ் த து அலறினான்.
வெல்டன் சங்கர் ’’
வெரி குட் சங்கர்! :
கிவ் ஒன் மோர் ஹிட் சங்கர்!’ என்று நாலா பக்கங்களிலிருந்தும் சங்கரின் மாணவ நண்பர்கள் உற்சாகக் குரல் எழுப்பினார்கள்.
தாக்குண்ட புலியைப்போல் பாவாடை, சங்கர் மீது பாய்ந்தான். சங்கர் உடனே கபார்’ என்று