பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

அப்படியே குனிந்து, வஸ்தாதின் வயிற்றில் அநா யாசமாக ஒரு குத்துவிட்டான்.

அவ்வளவுதான்; பாவாடை நெரிப்பில் விழுந்த புழுப்போல ஐயோ!.ஐயோ!?? என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறின்ை; புரண்டான்.

இதையெல்லாம் கண்ட பட்டாமணியத்துக்குத் தலையே சுழல்வதுபோலிருந்தது. அவரால் இந்தக் காட்சியை நம்பவேமுடியவில்லை. ஒரே சமயத்தில் பத்துப்பேருக்குப் பதில் சொல்லும் சண்டியர் பாவாடை, ஒரு சிறு பையனிடம் தோற்றுத் தரையில் கிடந்து புரளுகிருனே!

முக்கிமுனகிக் கொண்டே எழுந்த பாவாடை எஜமான்' என்று ஏதோ பேச வாயெடுத்தான். "எல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்; முதலில் வண்டியில் ஏறு?’ என்று அவர் அதட்டினர்.

வைத்த கண் வாங்காமல் சங்கரையே ஆச்சரி யத் தோடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண் டிருந்த வசந்தி, அப்பா வருவதைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பா வா ைட மெல்ல ஒர் எம்பு எம்பி வண்டியோட்டியின் பக்க மாக முன் புறத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

வழியில், ஆதியோடந்தமாகப் பாவாடை பட்டாமணியத்திடம் விஷயத்தையெல்லாம் கூற. கூட இருந்த வசந்தி அக்கறை இல்லாதவள் போல் அனைத்தையும் கவனித்துக் கொண்டே வந்தாள்.