பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கும் குரலி லேயே, யார் இந்தக் காரியத்தைச் செய்தவன்??? என்று மிகவும் கோபமாகக் கேட்டார் சந்தானம்.

யாரோ சங்கராம், எஜமான்; சோனி மாதிரி இருப்பான். அந்தப் பாவிப்பயல் பண்ணின காரியத்தைக் கேளுங்க’’ என்று உக்கடை நாயர் வாசலில் நடந்தசண்டையைப்பற்றி வஸ்தாதும் கூட இருந்தவர்களும் விஸ்திரமாக சந்தானத்திடம் விளக்கிக் கூறினார்கள்.

I பிறகு, அவனும்; கூட இன்றைருத்தனுமா இருட்டினதும் என் தோட்டத்துப் பக்கம் போவதைப் பார்த்தேன். ஆனா கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வைக்கோல் போர் குபிர்னு பத்தி எரிஞ்சதுங்க. பாவிப்பசங்கள்.பிடிக்கறதுக்குள்ளாற ஒடிட்டானுங்க. அப்பாலே, தீயைப் பார்ப்பேனா, ஆளைத் தேடு வேனா? நாங்க இத்தனை பேரும் அரும்பாடுபட்டுத் தண்ணியை மழையாகக் கொட்டியுங்கூடப் போரு போயிட்டுதுங்க!--பாவாடை அழாக் குறையாகக் கூறினான். கூட இருந்தவர்கள் அதை ஆமோதித் தார்கள். *

சரி, நான் இப்பவே ஹாஸ்டலுக்குப் போய் விசாரிக்கிறேன்; நீங்க அமைதியாகப் போங்க...?? என்றார் சந்தானம்.

விசாரிச்சாப் போதாதுங்க; எங்களுக்கு தியா யம் கிடைக்கனும்!?--பாவாடை சிடுசிடுத்தான்.

  • அதுக்கு நான் என்ன செய்யனும்???