53
முற்றிலும் பெண்களே கலந்து கொள்ளும் விளை யாட்டு இது ஒன்றேயாதலால்; பார்ப்பதற்கு வேடிக் கையாகவும், அழகாகவும் இருந்தது.
வசந்தி அடிக்கொருதரம் தன் தந்தை அமர்ந் திருக்கும் பகுதிப் பக்கம் விழிகளைச் சுழல விட்டுக் கொண்டே இருந்தாள். அதற்குக் காரணம், சங்கர் பட்டாமணியத்தின் அருகிலேயே அவளது ஆட் டத்தை மிகவும் ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்தது. தான்.
வெல்டேக்கன் வசந்தி!’’
க்ளவர்? - போன்ற புகழுரைகள் வசந்தியை வெகுவாக உற்சாக மூட்டிவிட்டன போலும். மிகவும் அநாயாசமாக விளையாடி இறுதி ஆட்டத்தில் வெற்றியை நிலைநாட்டிவிட்டாள்.
கரகோஷம் காதைப் பிளந்தது. வசந்நியையும், அவளது கோஷ்டியையும் எல்லோரும் புகழ்ந் தார்கள்.
தந்தையின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்ட வசந்தியிடம், சங்கர் கையில் தயாராக வைத்திருந்த உயர்ரகச் சாக்லெட்டை நீட்டினான். அவளும் அதை ஆசையுடன் வாங்கிச் சுவைத்தாள். விளையாடிக் களைத்து வந்த அவளுக்குச் சங்கர் அளித்த பரிசு மிகவும் இனித்தது.
ஜே.4