பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

குறைஞ்சது ஆறுமாசத்துக்கு ஆசுபத்திரியிலே யிருந்து வீட்டுக்கு வரக்கூடாது. ஹ ஹ ஹா!? என்று மனத்துக்குள்ளேயே கறுவிக் கொண்டான்.

பட்டாமணியம் தம்முடைய முழுக்கை ஜிப்பா வின் மேல், சரிகை அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்துவிட்டார். வாசலில் போடப்பட்டிருந்த கோடைப் பந்தலில் ரேக்ளா பூட்டி தயாராக நின்று கொண்டிருந்தது. வண்டி யில் ஏறத் தயாராக வசந்தியும், சங்கரும் வந்து விட்டார்கள்.

'இருங்க, ஒரு நிமிஷம்!’’ என்று வேலைக்கார முனியன் உள்ளே சென்று தயாராய் வைத்திருந்த வெற்றிலைபாக்குத் தட்டைக் கொண்டு வந்து வெள் ளோட்டம் போகிற வண்டிக்குச் சூடம் காட்டினான்.

வண்டியில் எல்லோரும் ஏறிக் கொண்டு விட் டார்கள். முன்புறம் சங்கரும் வசந்தியும்; பின்பக்கம் பட்டாமணியம். இதை வேடிக்கை பார்க்க ஒரு சிறு கூட்டமும் அங்கே கூடியிருந்தது. பாவாடை, 'ஹை!’’ என்று ஒர் அதட்டு அதட்டி விட்டுப் பாய்ந்து நுகத்தடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு சாட்டையால் ஒரு சொடுக்குச் சொடுக்கினான். காளைமாடு காலைவாரிக் கொண்டு பாய்ந்து கிளம்பியது.

வண்டி இப்போது சந்தடிமிக்க சந்தைப் பேட்டையை விட்டு, அகலமான கொள்ளிடம்