பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

பதிலளித்தபடியே, கையிலிருந்த தார்க்குச்சியால் மீண்டும் ஒரு குத்துக் குத்தினான்.

காளை பயங்கரமாக அலறிக்கொண்டு தாறு மாறாகத் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. அதன் தொடையிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்த தையும் பொருட்படுத்தாமல் பாவாடை மேலும் மாட்டை அடித்து வாலை முறுக்கினான். முன்புறம் இருந்த வசந்தி, "ஐயோ அப்பா! வண்டியை நிறுத்தச் சொல்லுங்க. நான் இறங்கிடறேன்!22 என்று பயம் தாங்காமல் அழுதாள்.

வண்டி சாலையின் இருமருங்கிலுமிருந்த புளிய மரத்தின்மீது எப்போது மோதுமோ? அட்டகாச மாகச் சிரித்தபடி பாவாடை வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.

சங்கருக்குத் திடீரென்று சந்தேகம் வந்து விட்டது. பாவாடை தங்களை அடியோடு கவிழ்க்கச் சூழ்ச்சி செய்கிறானா என்ன? அடுத்த நிமிஷம்.

“குபீர்!’’ என்று பாய்ந்த சங்கர் தன் முஷ்டியை முறுக்கிப் பாவாடையின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

சற்றும் எதிர்பாராத இந்த இரும்புத் தாக்கு தலுக்கு இலக்கான பாவாடை, ஐயோ அம்மா!?? என்று தலைக்கயிற்றை விட்டு விட்டு, சாலையின்

ஒரத்தில் தலைகுப்புறச் சென்று விழுந்தான்.