பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வெகுவாக ரசித்தார்கள். அத்துடன் பாவாடை வஸ்தாதை, நாயர் வெகுவாக உபசரித்துக் காக்காய் பிடிப்பதைக் காண அவர்களுக்குச் சிரிப்பாக வந்தது.

அன்று தியேட்டரில் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்த வெகு விரைவிலேயே எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இதல்ை ஏமாற்றம் அடைந்த கூட்டத்தினர் மனமின்றித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். பிளாக்’கில் வாங்கி அநுபவ முள்ளவர்கள், வஸ்தாது கையில் பத்து டிக்கெட் டாவது இல்லாமலா போகும்? சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்?’ என்று வஸ்தாதை நெருங்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

டேய், இன்னிக்கு வஸ்தாதுக்கு வேட்டை தாண்டா!' என்றான் சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட சங்கரின் நண்பன் கோபு.

'ஏண்டா சங்கர், நாம்கூட குரூப்பா இந்தச் சைடு பிஸினஸ் பண்ணினா என்ன? பாக்கெட் மணி கிடைக்கும். வீக்லி ஒன்ஸ் டவுனுக்குப் போய் இங்கிலீஷ் படம் பார்த்துவிட்டு வரலாம்.??

ஆமாண்டா, டிக்கெட் என்னமோ ஆறுக்கு மேலேதான் குடுக்க ஆரம்பிக்கிறாங்க. ஸ்கூல் விட்டு வந்தாக்கூடப் போதும், ப்ளென்டி’யா டயம் இருக்கு. நீ என்ன சொல்றே சங்கர்? நாளையி லிருந்தே பிஸினஸ் ஆரம்பிச்சிடுவோம். கூட்டத்தில் முண்டியடிக்கிற ஜாப்: என்னுடையதாகவே இருக் கட்டும். நான் பார்த்துக்கறேன்!” என்றான் பாலு.