பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

வந்தார்கள். அப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்கோ? ஆஸ்பத்திரியில் என்ன கஷ்டப்படு கிறாரோ?’ என்று வசந்தி வழி முழுவதும் கவலைப் பட்டாள்.

அப்பாவுக்கு ஒன்றும் நேராது. சாயங்காலம் தான் பொன்னுசாமி வந்து ஆஸ்பத்திரிக்கு நம்மைக் கூட்டிக்கொண்டு போறதாகச் சொல்லியிருக்கிறாரே. நீ தைரியமா இரு: என்று சங்கர் ஆறுதல் கூறினான்.

அன்று மாலை பொன்னுசாமி சொன்னபடியே தம்முடைய வண்டியில் பட்டாமணியம் வீட்டுக்கு வந்துவிட்டார்.

சங்கரும் வசந்தியும் ஆஸ்பத்திரிக்குப புறப்படத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுட்ன் முனியனும் அந்த வண்டியில் எஜமானைப் பார்த்துவர ஏறிக்கொண்டான்.

பொன்னுசாமியைக் கண்டதும் பட்டாமணியம் துக்கம் தாளாமல் வாய் விட்டே அழுதுவிட்டார். அவருடைய அழுகைக்குக் காரணம் அருகிலிருந்த எக்ஸ்ரே-படம்தான்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது: எப்படியும் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியிலிருந்து போக மூன்று நா ன்குவாரங்களாகுமென்று டாக்டர் கூறிவிட்டாராம்.