31
தைப் பார்த்தார். வசந்தி குனிந்தபடியே ஒரக் கண்ணால் சங்கரைப் பார்த்தாள்.
ஏன் வசந்தி, நீ பொன்னுசாமி வீட்டுக்குப் போயிடப் போறியா? என்று கேட்காமல் கேட்பது போலிருந்தது சங்கரின் பார்வை.
ஏம்மா வ ச ந் தி, 2.లిf அபிப்ராயம் என்னம்மா?’ என்று பட்டாமணியம் கேட்டவுடன் தான்; எங்கோ சென்றிருந்த உணர்வு மீண்டும் திரும்பியது வசந்திக்கு.
இல்லேப்பா, நான் நம்ம வீட்டிலேயே இருக் கேன். துணைக்குத்தான் சமையல்காரப் பாட்டி, சங்கர், முனியன் எல்லாரும் இருக்காங்களே: என்றாள் வசந்தி.
மகளின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்ட பட்டாமணியம் அதற்குமேல் அவளை வற்புறுக்தவில்லை. ஆனால் நீ இப்படி நிதம் என்னைப் பார்க்க வரவேண்டாம் வசந்தி’ என்று பட்டாமணியம் கூறி முடிக்கு முன்னர் வசந்திக்கு அழுகை வந்து விட்டது.
ஏம்ப்பா. என்மேலே கோபமா? நான்
அவங்க வீட்டிலேயே போய் இருக்கேன், அப்பா: என்றாள் குரல் தழுதழுக்க.
- சி.சீ...அசடே! இன்னும் நீ பச்சைப் பிள்ளை யாகவே இருக்கியே வசந்தி உன்மேலே எனக்கு