பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

மனத்துக்குள், இந்தப் பாவாடைத் தடியன் என்ன ஆனானோ...பாவம், அவனைப் போய் யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். எங்கே எல்லாம் அடிபட்டதோ:அவன் என்ன அவஸ்த்தைப் படுகிறானோ...பொன்னுசாமியிடம் கூடச் சொல்லி யனுப்ப மறந்து விட்டது!’ என்று வேதனைப்பட்டுக் கொண்டார் .

ஆனால், பட்டாமணியம் இப்படிக் காட்டுகிற அநுதாபத்துக்கெல்லாம் பாவாடை தகுதியுடை யவன் தானா? -இதே சமயத்தில் அவன் தம்மை ஒழித்துக்கட்ட என்னவெல்லாம் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான்-என்பதெல்லாம், பாவம் பட்டாமணியத்துக்குத் தெரிந்தால்தானே!