பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2

கடவுள்தான் எஜமானைச் காப்பாற்றவேண்டும்!?? என்று எண்ணிக் கொண்டான்.

வீட்டுக்கு வந்த பொன்னுசாமியை வசந்தியும், சங்கரும் ஆவலோடு வரவேற்றார்கள். அப்பாவுக்கு உடம்பு எப்படி மாமா இருக்கு?’’ என்று வசந்தி விசாரித்தாள்.

பொன்னுசாமி, பட்டாமணியம் கொடுத்த இரும்புப் பெட்டிச் சாவியை அவளிடம் கொடுத் தார்.

பெட்டிக்குள்ளே, அப்பாவோடு பாங்க் புத்த கப்பை மேலாகவே இருக்காம். எடுத்துவை. நாளைக்கு நான் ஆஸ்பத்திரிக்குப் போகறபோது கொண்டுபோகனும்’ என்றார் பொன்னுசாமி.

அன்றிரவு வெகுநேரம் முயன்றும் வசந்தியால் அந்த இரும்புப் பெட்டியைத் திறக்க முடியவில்லை. அந்தச்சாவிக் கொத்திலே எது சரியான சாவி என் பதைக் கண்டுபிடிக்கவே அவளால் முடிய வில்லை.

சங்கர், நீதான் இந்தப் பெட்டியைத் திறந்து அப்பாவுடைய பாஸ் புஸ்தகத்தை எடுக்கணும். என்னால் இதைத் திறக்கவே முடியல்லே...!’’ என்று இரும்புப்பெட்டிச் சாவியை அவன் மேஜை மீது போட்டுவிட்டுப் படிக்கச் சென்றுவிட்டாள்.