பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S4

‘பட்டாமணியம் இப்படிப் பட்டவரா?? என்கிற கேள்வியைவிட நல்ல வேளை! வசந்தி இதை யெல்லாம் பார்க்கவில்லையே! என்கிற ஆறுதலே பெரிதாக இருந்தது. சட்டென்று பாஸ் புஸ்தகத் தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றுமே அறியா தவன் போல் பெட்டியைப் பூட்டிச் சாவியையும் வசந்தியிடம் ஒப்படைத்து விட்டான் சங்கர்.

அவன் மனம் பட்டாமணியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கவே நடுங்கியது. எத்தனை பயங் கரமான-அது மட்டுமல்ல; எத்தனை வஞ்சகமான மனிதரும் கூட!

இவருடைய போலியான அன்பை உண்மை யென்று நம்பி ஏமாந்து போனேனே! சீ! இத்தகைய மனிதரிடமிருந்து ஒரு தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்டது ةaوسا ஒரு அவமானப்பட வேண்டிய விஷயமே! ஆனால் வசந்தியை எண்ணிப் பார்த்த போது-அவன் மனம் தடுமாறியது.