பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42 ஞானசம்பந்தர் அன்னையார் பிறந்த ஊர். பாணருடைய வேண்டுகோட் கிணங்கியே இத்தலத்துக்கு வருகின்றார். யாழ்ப்பாணரு டைய சுற்றத்தார்கள் திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு போற்றுகின்றனர். பெரும்பாணரும் தாம் பிள்ளையார் திரு வாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களை யாழில் வாசிக்கும் பேறு பெற்றமையைத் தம் சுற்றத்தாருக்கு எடுத்துரைக் கின்றார். தம் உறவினர்கள் தாம் பெற்ற பேற்றினைக் கண்டு மகிழ்வார்கள் என்றுதான் தெரிவித்தார். இதனைக் கேட்ட பாணரின் சுற்றத்தார்கள் .நீவிர் திருப்பதிகத்தை யாழிலிட்டுத் தக்க முறையில் வாசிப்பதனால் அதன் இசை யாண்டும் பரவுவதாயிற்று' எனப் பாணரை நோக்கி முகமன் உரைக்கின்றனர். உண்மையில், பாணர் குலத்த வர்கள் தமது இசை மரபைப்பற்றிப் பெருமை கொள்ப வர்கள். இசைவாணர்கள் - ஏன் கலைஞர்களுமே - தம் மரபைப் பற்றிப் பெருமை கொள்பவர்கள். நாதஸ்வரக் கலைஞர்கள் தம் மரபில் உன்ளவர்களால்தான் கர்நாடக சங்கீதம் வழிவழியாக மரபு கெடாமல் காப்பாற்றப் படுகின்றதென்ற கருத்தினைக் கொண்டிருப்பதை நாம் பார்க்கவில்லையா? தம் உறவினர்கள் கூறியதைக் கேட்ட பெரும்பாணர் அதிர்ச்சியடைகின்றார். இறையருளால் பெறற்கரிய இசை ஞானத்தைப் பெற்ற பிள்ளையாரின் பாடல்கள், கேவலம் தம் யாழின் மூலமாகப் பெருமையடைந்தன என்ற சொற்களை உண்மைத் தொண்டராகிய அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஞானசம்பந்தரைப் பணிந்து திருப்பதிகத்தின் இசை அளவிலடங்காத் தன்மைய தென்பதனைத் தம் சுற்றத்தாரும் பிறரும் அறிந்து கொள்ளும்படி பாடியருளுமாறு வேண்டுகின்றார். அவரது வேண்டுகோட்கிணங்க திருப்பதிகத்தின் இசை உலகர் கண்டத்திலும் கருவியிலும் அடங்காத வண்ணம் மோதர் மடப்பிடியும் (1135) என்ற முதற் குறிப்புடைய திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/185&oldid=856032" இலிருந்து மீள்விக்கப்பட்டது