பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 ஞானசம்பந்தர் தம் கையில் வாங்கிக் கொண்டு, ஐயரே, நீவிர் யாழை முறிக்கப் புகுதல் முறையா? சிவபெருமானின் திருவருட் பெருமையெல்லாம் இக்கருவியில் அடங்க முடியுமா? சிந்தையால் அளவு படாப் பதிக இசை செயலளவில் எய்தாது. ஆகவே தீவிர் இந்த யாழினைக் கொண்டே இறைவனின் திருப்பதிக இசையினை வந்தவாறு பாடி வாசிப்பீராக’ என்று கூறித் தம் கையிலுள்ள யாழினைப் பாணர் கையில் திரும்பக் கொடுத்தருளுகின்றார். இந்தப் பதிகம் வியாழக் குறிஞ்சி' என்ற பண்ணிலுள்ளது. ஆனால் இதுவே ஒரு யாழை முரிக்கக் காரணமாயிருந் தமையால் யாழ்முரி என்ற பெயரைப் பெறுகின்றது. தருமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனும் யாழ்முரி, காதர்' என்ற பெயரைப் பெறுகின்றார். யாழ்ப்பாணரும் அதனைப் பெற்றுக் கொண்டு என்றும்போல் தமக்குரிய இசைத் தொண்டினை மேற்கொள்ளுகின்றார். 41. யாழ்முரி : முரி என்பது ஒரடியில் தொடங்கிய யாப்பியலையும் இசை நடையையும் அவ்வடியிலே முரித்து மாற்றி மற்றொரு யாப்பியலும் இசை நடையும் அமையப் பாடப் பெறுவதாகிய இசைப்பாட்டு. இதனை முரிவரிஎன்றும் கூறுவதுண்டு. இதன் இலக்கணத்தை, எடுத்த இயலும் இசையும் தம்மின் முரித்துப் பாடுதல் முரியெனப் படுமே. என்ற சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் காட்டிய மேற்கோள் சூத்திரத்தால் நன்குணரலாம். இங்ங்ணம் விரைவில் முரிந்து மாறும் இயலிசை நடையமைந்த வரிப் பாடலை யாழ் முதலிய இசைக் கருவிகளில் வாசித்துக் காட்டுதல் இயலாதாகலின், முரியாகிய இந்த இசைப் பாடலை யாழ்முரி என்ற பெயரால் வழங்குதலும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/187&oldid=856034" இலிருந்து மீள்விக்கப்பட்டது