பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் தல வழிபாடு 267 எஞ்சியிருக்கும் ஏழு தலங்களில் புறவார் பனங்காட்டுர்’ என்ற தலத்தை (நடுநாட்டுக்குரியது) தமது தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தில் இறுதிக் கட்டத்தில் வழிபடு கின்றார். மீதமுள்ள ஆறுதலங்கட்குச் சென்றதாக அறியக் கூடவில்லை. மேலும் தாம் செல்லும் வழியருகே யுள்ள தொண்டை நாட்டுத் திருத்தலங்களாகிய திருவக்கரை, திருஇருப்பை மாகாளம் என்ற இரு தலங்களின் வழிபாட்டையும் இப்பயணத்திலேயே நிறைவு செய்தது கவனிக்கத் தக்கது. இன்னும் தம் வழியில் நேர்படாத புறவார் பனங்காட்டுர்’ என்ற தலத்தை இப் பயணத்தில் ஒதுக்கி வைத்ததும் நினைக்கத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/308&oldid=856278" இலிருந்து மீள்விக்கப்பட்டது