பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 305 காழிசேர்மினே என்ற முடிவு காழிப் பெருமானுடன் நாமும் காழிநகர் சேர்வது போன்ற உணர்வைப் பெறுகின்றோம். பின்னர் திருக்கோயிலை வலம் வந்து கோபுரம் வழிபட்டு திருவருளின் முழு நோக்கம் பெற்றது போன்ற உணர்வுடன் பொன்மயப் பாவையுடன் புணர்ந்திருந்த புராதனராம் தோணியப்பரைச் சென்னிமிசைக் கரங் குவித்து நிலத்தில் வீழ்ந்து வணங்குகின்றார். பின்னர்த் தம் திருமாளிகையடைந்து தாய் தந்தையரை வணங்கி மகிழ் கின்றார். இதற்குப் பிறகு திருத்தலப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி. தோணிபுரத்துப் பெருமானைச் செந்தமிழ்ப் பதிகங்களால் போற்றி வருகின்றார்: பிள்ளையாரின் இறுதி நாட்கள் இப்படிக் கழிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/346&oldid=856361" இலிருந்து மீள்விக்கப்பட்டது