பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஞானசம்பந்தர் கின்றார். பிரம்ம தீர்த்தத்தின் கரையில் பிள்ளையாரை அமரச்செய்துவிட்டு விரைவில் நீராடித் திரும்பும் கருத் துடன் நீரில் இறங்கி செய்தற்குரிய பல நியமங்களைக் செய்கின்றார். பிள்ளையாரும் அவற்றை ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார். பின்பு சிவபாத இருதயர் நீருள் மூழ்கிச் செபித்தற்குரிய அக மருட மந்திரத்தை ஒதுதற் பொருட்டு நீருள் சிறிது நேரம் மூழ்கி இருக்கின்றார். கரையிலமர்ந்திருந்த பிள்ளையார் தம் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மூளப் பெற்றுக் கண்களில் நீர் ததும்பக் கைகளால் பிசைந்து உதடுகள் துடிப்பப் பொருமி அழுகின்றார். விேழான்றையும் நோக்காது திருத்தோணிபுரத்து விமானத்தின் சிகரத்தைப் பார்த்து அம்மையே, அப்பா என்று அழைத்து அழு கின்றார். இந்நிலையில் தோணி புரத்து இறைவன் உமா தேவியாருடன் விடையின் மீது எழுந்தருளிப் பிரம்ம தீர்த்தக் கரையை அடைகின்றார். உமையம்மையை நோக்கி நின் துணை முலைகள் பாலடிசிலைப் பொன் வள்ளத்தில் ஊட்டுக" எனப் பணிக்க, அவரும் திருமுலைப்பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்தருளிச் சிவஞானமாகிய அமிழ்தத்தையும் குழைத்துப் பிள்ளையார் கையில் கொடுத்து அவரது அழுகையைத் தீர்த்துப் பாலடிசிலை ஊட்டியருளுகின்றார். இங்ங்னம் கவுணியப்பப் பிள்ளையார் இளம்பருவத்தில் அம்மையப்பரால் ஆட்கொள்ளப் பெற்ற மையால் ஆளுடைய பிள்ளையார் எனவும், தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைத்தற்கரிய சிவஞானம் பெற்றமையால் 6. சிவஞானம்-பதிஞானம், பதிஞானத்திற்குதான் பதிப்பொருள் இனிது விளங்கும். பதிஞானத்தால் இறைவனை அறிதலையே சைவ சமய ஆச்சாரியர்கள் *அருட் கண்ணால் காணுதல்’ என்று கூறுவர். இந்த ஞானம் பசு ஞானம், பாச ஞானம் இரண்டிலும் வேறுபட்டது; கி.யர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/53&oldid=856483" இலிருந்து மீள்விக்கப்பட்டது