பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

ஞாயிறும் திங்களும்


சிந்தனையால் நாவலத்தால் செய்யஎழுத் தாற்றலினால் இந்தத் திருநாட்டின் ஏறனைய நல்லிளைஞர் நெஞ்சங் கவர்ந்தான் நிலையான தம்பியராக் கொஞ்சி அனைத்துக் குலவி மகிழ்கின்றான் உய்தற் குரியவழி ஒதிவந்த நம்தலைவர் செய்தற் கரியனவே செய்துயர்ந்த நம்பெரியார், தந்திரத்தில் வல்ல தகுதியுள முதறிஞர், செந்தமிழில் வல்லார், சிவனடியார், மற்றவரும் அண்ணனுக்கு மூத்தோர் அறிவாளர் ஆனாலும் தண்ணளியன் முன்னிலையில் தம்பிய ராகிவிட்டார் அண்ணாநம் அண்ணாஎன் றப்பெரியர் வாயார அண்ணாவைச் சொல்லி அழைத்ததை நாமறிவோம். பேச்சாளர் என்று பெயர் சொல்லி மேடைகளில் ஏச்சாள ராகி இழிமொழிகள் கட்டுரைத்துப் பேசிவரும் பித்துடையார் பேச்செல்லாம், நெஞ்சத்து வீசுகிற வேலாகி மேலோரைப் புண்படுத்தும் நாடாளும் நம்தலைவன் நாவடைத்துப் பேசுங்கால் கூடாரைக் கூடக் குலவிவரப் பண்படுத்தும் வெல்லரிய சொல்வல்லான் வெற்றி தரும்எழுத்தில் நல்லதொரு முத்திரையை நாட்டிப் புகழ்பெற்றான் செந்தமிழில் மிக்கபுலம் சேர்ந்ததுபோல் ஆங்கிலத்தும் வந்த புலமுடையான் வாகைத் திறமுடையான் நான் பிறந்த பொன்னாட்டை நல்லதமிழ் நாடென்று தேன்போல் இனிக்கப்பேர் செய்தானை வாழ்த்துகின்றேன் . என்னுள் கொலுவிருந் தேற்றம் தருபவட்குக் கண்ணுள் கருமணிக்குக் காவியத் தாய்மொழிக்கு மாநாடு கூட்டி மலர்சூட்டிப் பாரெல்லாம் தான்நாடச் செய்தானைத் தாள்பணிந்து போற்றுகின்றேன் மற்றோர் வளர்ச்சியினால் தன்வளர்ச்சி மாறுமெனச் சற்றேனும் எண்ணாமல் தன்னாற்றல் நம்புமவன்